டெல்லி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டது. 7 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்படும்.
17வது நாடாளுமன்றத்தின் (லோக்சபா) பதவிக்காலம் வருகின்ற ஜூன் 16ம் தேதியுடன் முடிவடைகின்றது. அதற்கு முன்னர் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு புதிய அரசு அமைக்க வேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தாண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் 18வது நாடாளுமன்ற தேர்தலாகும்.
நாடு முழுவதிலும் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு என மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். பல நாட்களாக தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்று கட்சிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர். தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீர் ராஜினாமா காரணமாக தேர்தல் தேதி தள்ளிப்போனதாக கூறப்பட்டது.
இந்நிலையில், இன்று மாலை 3 மணிக்கு, 18வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறும். முதல் கட்டத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறும். கடைசிக் கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதி நடைபெறும். வாக்குகள் எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து தேதி குறித்த விவரங்களை வெளியிட்டனர்.
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
{{comments.comment}}