பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Jan 24, 2026,05:19 PM IST

சென்னை: பகுதிநேர  ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம். சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.2000ல் இருந்து ரூ.3,400 ஆக உயர்த்தப்படும் என சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


2026 சட்டசபை தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடக்கவுள்ள நிலையில், தமிழக சட்டமன்றத்தின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 20 ஆம் தேதி தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை கூடிய நிலையில் நான்காவது ஆண்டாக ஆளுநர் உரையை படிக்காமல் வெளிநடப்பு செய்தார். இதைத்தொடர்ந்து அதிமுக, பாஜக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில் தமிழக சட்டபையின் 5 ஆம் நாள் கூட்டம் இன்று நடந்து வருகிறது.




சட்டப்பேரவையில் உரையாற்றிய முதல்வர், நான் இந்த 5 ஆண்டு காலத்தில் எனக்கும், எனது மனசாட்சிக்கும் கட்டுப்பட்டு, தினந்தோறும் திட்டங்கள் தீட்டி உழைத்திருக்கிறேன். இந்த உழைப்பையும், வளர்ச்சியையும் பார்த்து, அடுத்த 5 ஆண்டுகளுக்கும் திராவிட மாடல் ஆட்சிதான் தொடர வேண்டும் என்று தமிழநாட்டு மக்கள் முடிவு செய்துவிட்டனர். உறுதியாக நாங்கள் தான் மீண்டும் வருவோம். கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும். மேலும் 1,088 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கிராம சாலைகள் மேம்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம் வழங்கப்படும். சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்களுக்கு  ஓய்வூதியம் ரூ. 2000ல் இருந்து ரூ.3.400 ஆக உயர்த்தப்படும் என்றும், கூடுதலாக ஒரு லட்சத்து 80 ஆயிரம் நபர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும், தூய்மை பணியாளர்களுக்கான ஓய்வூதியம் 3000 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். புதிதாக 2,600 கி.மீ கிராம சாலைகள் மேம்படுத்தப்படும். சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழக புதிதாக 1.80 லட்சம் நபர்களுக்கு ஒய்வூதியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 


ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டப்பேரவைக் கூட்டம் முதலமைச்சரின் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துடன் நிறைவுபெற்றுள்ளது. இதனையடுத்து தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..வருகிற 15ம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி:வானிலை மையம்

news

திமுகவிடம் தாலி கட்டிய மனைவி போல் தான் உள்ளனர் கூட்டணி கட்சிகள்: செல்லூர் ராஜூ விமர்சனம்!

news

சேலம் வருகிறார் விஜய்.. நாளை நிர்வாகிகள் சந்திப்பு.. 4,998 பேருக்கு மட்டுமே அனுமதி!

news

சத்துணவு ஊழியர்கள் போராட்டம்: நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்

news

தொலைந்த பைசா தினம்.. ஆமாங்க.. இப்படியும் ஒரு தினம் இருக்கு.. அதுவும் இன்றுதான் அது!

news

கமகமக்கும் இறால் தொக்கு.. நம்ம ஊரு ஸ்டைல்ல.. சாப்ட்டுப் பாருங்க.. நாக்கு ஊறும்!

news

தாயையும் தம்பியையும்.. பள்ளியில் புகுந்து மாணவர்களை வேட்டையாடிய 18 வயது திருநங்கை!

news

கல்யாணம் காது குத்தா.. சுப நிகழ்ச்சிகளுக்கு இனி அரசு பேருந்து உங்கள் வாசலில்!

news

ஒரு சிறு பயணம்.. நிறைவாக கடப்போம்.. A Short Journey

அதிகம் பார்க்கும் செய்திகள்