நெல்லை: திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி வரை இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் சேவை முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நெல்லையிலிருந்து தூத்துக்குடி வரை தினசரி பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் நெல்லையில் இருந்து புறப்பட்டு கங்கைகொண்டான், வாஞ்சி மணியாச்சி, தட்டப்பாறை வழியாக தூத்துக்குடி சென்றடையும். இந்தப் பயணிகள் ரயில் தினமும் நெல்லையிலிருந்து காலை 7.35 மணிக்கு புறப்படும். அதேபோல் மறு மார்க்கமாக தூத்துக்குடியில் இருந்து 6.25 மணிக்கும் புறப்படும்.

இதற்கிடையே பாலக்காடு டூ நெல்லை வரை இயக்கப்பட்டு வரும் பாலருவி என்ற எக்ஸ்பிரஸ் தற்போது தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. இதனால் நெல்லை- தூத்துக்குடி இடையே இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் பிரதி ஞாயிறு தோறும் ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
தற்பது இன்று முதல் நெல்லை டூ தூத்துக்குடி இடையே இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் சேவை முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை நெல்லை டூ தூத்துக்குடி இடையே ரயில் சேவை இயக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை வழியாக தூத்துக்குடி செல்லும் இந்தப் பயணிகள் ரயிலின் கட்டணம் மிகக் குறைவு என்பதால் பல கிராம மக்கள் பயனடைந்து வந்தனர். குறிப்பாக தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கொண்டு வரும் பொருட்களை எளிதாக கொண்டு செல்ல இந்த பயணிகள் ரயில் சேவை மிகவும் பேருதவியாக இருந்து வந்தது. தற்போது நெல்லை டூ தூத்துக்குடி இடையே இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட செய்தி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}