சென்னை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையையொட்டி தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் புகழாரம் சூட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி, அதற்கான முதல் மாநாட்டை கடந்த 27ம் தேதி பிரம்மாண்டமாக நடித்தினார் விஜய். அந்த மாநாட்டில் விஜய் வெறும் 45 நிமிடங்கள் மட்டுமே உரையாற்றினார். அந்த உரை குறித்து தற்போது வரை தமிழகத்தில் பரபரப்பான விவாதம் ஒடிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் அவரவர் கருத்துக்களை காரசாரமாக பதிவிட்டு வருகின்றனர். விஜய் பேச்சு குறித்த பரபரப்பு இன்றும் குறைந்தபாடில்லை.
இந்நிலையில், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117வது ஜெயந்தி மற்றும் 62வது குருபூஜை விழா இன்று நடைபெற்று வருகிறது. பல்வேறு கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள புகழஞ்சலி:
அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார். இந்திய விடுதலைக்காகக் காத்திரமாகக் களமாடியவர். மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் படையை வலுப்படுத்தத் துணை நின்றவர். பாராளுமன்ற, சட்டமன்ற அரசியலில் முத்திரை பதித்த பேச்சுக் கலைப் பேரரசர். சமூக நல்லிணக்கம் பேணியவர். தமிழக அரசியலில் முக்கிய அடையாளங்களில் ஒருவராகவும் மாறிய, மகத்தான மனிதரை அவரது குருபூஜைத் திருநாளில் வணங்கி வாழ்த்திப் போற்றுவோம் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
ஓடி விளையாடு பெண்ணே
{{comments.comment}}