சென்னை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையையொட்டி தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் புகழாரம் சூட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி, அதற்கான முதல் மாநாட்டை கடந்த 27ம் தேதி பிரம்மாண்டமாக நடித்தினார் விஜய். அந்த மாநாட்டில் விஜய் வெறும் 45 நிமிடங்கள் மட்டுமே உரையாற்றினார். அந்த உரை குறித்து தற்போது வரை தமிழகத்தில் பரபரப்பான விவாதம் ஒடிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் அவரவர் கருத்துக்களை காரசாரமாக பதிவிட்டு வருகின்றனர். விஜய் பேச்சு குறித்த பரபரப்பு இன்றும் குறைந்தபாடில்லை.

இந்நிலையில், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117வது ஜெயந்தி மற்றும் 62வது குருபூஜை விழா இன்று நடைபெற்று வருகிறது. பல்வேறு கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள புகழஞ்சலி:
அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார். இந்திய விடுதலைக்காகக் காத்திரமாகக் களமாடியவர். மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் படையை வலுப்படுத்தத் துணை நின்றவர். பாராளுமன்ற, சட்டமன்ற அரசியலில் முத்திரை பதித்த பேச்சுக் கலைப் பேரரசர். சமூக நல்லிணக்கம் பேணியவர். தமிழக அரசியலில் முக்கிய அடையாளங்களில் ஒருவராகவும் மாறிய, மகத்தான மனிதரை அவரது குருபூஜைத் திருநாளில் வணங்கி வாழ்த்திப் போற்றுவோம் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!
சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு
என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி
சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு
விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு
{{comments.comment}}