சென்னை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையையொட்டி தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் புகழாரம் சூட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி, அதற்கான முதல் மாநாட்டை கடந்த 27ம் தேதி பிரம்மாண்டமாக நடித்தினார் விஜய். அந்த மாநாட்டில் விஜய் வெறும் 45 நிமிடங்கள் மட்டுமே உரையாற்றினார். அந்த உரை குறித்து தற்போது வரை தமிழகத்தில் பரபரப்பான விவாதம் ஒடிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் அவரவர் கருத்துக்களை காரசாரமாக பதிவிட்டு வருகின்றனர். விஜய் பேச்சு குறித்த பரபரப்பு இன்றும் குறைந்தபாடில்லை.

இந்நிலையில், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117வது ஜெயந்தி மற்றும் 62வது குருபூஜை விழா இன்று நடைபெற்று வருகிறது. பல்வேறு கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள புகழஞ்சலி:
அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார். இந்திய விடுதலைக்காகக் காத்திரமாகக் களமாடியவர். மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் படையை வலுப்படுத்தத் துணை நின்றவர். பாராளுமன்ற, சட்டமன்ற அரசியலில் முத்திரை பதித்த பேச்சுக் கலைப் பேரரசர். சமூக நல்லிணக்கம் பேணியவர். தமிழக அரசியலில் முக்கிய அடையாளங்களில் ஒருவராகவும் மாறிய, மகத்தான மனிதரை அவரது குருபூஜைத் திருநாளில் வணங்கி வாழ்த்திப் போற்றுவோம் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Paytm ஆப் வேலை செய்யுமா?.. மத்திய அரசு உத்தரவு கூறுவது என்ன?
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?
கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!
குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!
{{comments.comment}}