இலக்கியமும் மற்றும் இலக்கணமும்!

Jul 21, 2026,12:56 PM IST

- மும்மொழிக்  கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி 


செல்லமாய்க் கொஞ்சுவது

இலக்கியம்!

பூரிக்கட்டையால் அடிக்கக் கூடாது 

என்பது இலக்கணம்!


கார் வாங்கலாம் என்கிறது இலக்கியம்! 

கடன் வாங்கக் கூடாது 

என்கிறது இலக்கணம்!


எப்போதும் ஊர் சுற்றலாம் 

என்கிறது இலக்கியம்! 

எல்லா நாளும் ஞாயிறு அல்லவே

என்கிறது இலக்கணம்! 




எதிலும் ஆசையே ஆக்க சக்தி 

என்கிறது இலக்கியம்!

ஆசையே துன்பத்திற்குக் காரணம் 

என்கிறது இலக்கணம்! 


காப்பி தானே இன்னொன்று  

குடிக்கலாம் என்கிறது இலக்கியம்! 

அளவுக்கு மீறினால் அமிர்தமும் 

நஞ்சு என்கிறது இலக்கணம்! 


வாழ்க்கை வாழத்தானே 

என்கிறது இலக்கியம்! 

நிச்சயமற்ற வாழ்விலே எது 

நிரந்தரம் என்கிறது இலக்கணம்! 


ஜெயித்தால் கெட்டிக்காரத்தனம் 

தோற்றால் விதி என்கிறது

இலக்கியம்! எல்லாம் இறைவன்

செயல் என்கிறது இலக்கணம்


(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Budget: ஆகஸ்ட் 5-இல் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!

news

பெரம்பூர் தேர்தல் வழக்கு : முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

news

எம்எல்ஏ.,வை கைது செய்ய முடியுமா?: சபாநாயகர் விளக்கம்!

news

பிரதமர் மோடி நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் : ராகுல் காந்தி விமர்சனம்

news

“எங்களுக்கு அநீதி நடந்துள்ளது” – 'ஜனநாயகன்' ரிலீஸ் குறித்து இயக்குனர் எச்.வினோத் பரபரப்பு பேட்டி!

news

"புத்தகப் பை சுமை குறைக்கப்படும்": பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!

news

மக்களவையில் 2ஆவது நாளாக எதிர்கட்சிகள் அமளி: தொடர்ந்து அவை ஒத்திவைப்பு!

news

பிரதமர் மோடி தலைமையில் தே.ஜ.கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம்

news

பி.வி. சிந்துவுக்கு விராட் கோலி சொன்ன அந்த ஒரு வார்த்தை.. ஜப்பானில் நடந்த மேஜிக்!

அதிகம் பார்க்கும் செய்திகள்