- கவிதா அறிவழகன்
வேகம் கொண்டு ஓடும்
இந்த உலகினில்,
சூறாவளி வீசும் பொழுது
விழுந்து எழும் மனிதனே!
நிதானம் தவறுகையில்
ஏற்படும் விளைவுகளையும்
அதன் பாதிப்புகளையும்
சந்திப்பது கடினம்.
அலைகள் ஆவேசமாய்
வீசும் பொழுது நாவடக்கமும் வேண்டும்;
பேசும் வார்த்தையில் குறையில்லாமல்,
நிதானம் என்ற நிழலான
நீர்த்துளியும் வேண்டும்.

தவறுகள் நேருவது
சகஜம் எனில்,
தர்க்கம் புரியாமல்
ஆழ்ந்து யோசித்து,
பின்வாங்காமல்,
நிலைதடுமாறாமல்
சரிசெய்து வாழ்வது
ஒரு அழகிய வாழ்வியல்.
புயல் ஓய்ந்த பின்னும்,
வேரூன்றி நிற்கும் மரம்போல், சோதனை சூழ்ந்த வேளையிலும் சோர்ந்திடாமல் தெளிவான மனதோடு நிதானம் காத்து நடந்திடின்
வெற்றி நம்மை சூழும்.
நம்முடைய இந்தப் பயணமானது,
அதிக சத்தமின்றி, மிதமான அமைதியோடு,
சலசலவென்று ஓடும் நதியைப் போல,
ஒவ்வொரு அடியையும் உணர்ந்து,
நிம்மதி நிழலாய் உன்னைத் தொடரும்.
(Kavitha Arivalagan, Creative writers, Dharmapuri)
அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் அதிமுக எம்எல்ஏ.,க்கள்...காலியான 7 தொகுதிகள்
அரசு வேலை மோசடி : திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு குற்றப்பிரிவு போலீசார் சம்மன்!
அதிமுகவிற்கு மீண்டும் அதிர்ச்சி... எம்.ஆர்.விஜயபாஸ்கரும் ராஜினாமா.. காலியிடம் 7 ஆனது
கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்? கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க திட்டம்!
ஆவின் மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கான ரூ.2 தள்ளுபடி ரத்து!
ஆனி மாதம் வரும்.. ஜேஷ்ட பெளர்ணமி திதி.. நாளை காலை 6.11 வரை இருக்கு!
விழுப்புரத்தில் நடந்த திருக்குறள் திருவிழா.. சென்னை ஆசிரியை கோ.லதாவுக்கு விருது
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கிரிவல பக்தர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
"சூர்யாவுக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை" – நற்பணி இயக்கம் விளக்கம்!
{{comments.comment}}