நிதானம்

May 11, 2026,03:45 PM IST

- கவிதா அறிவழகன்


வேகம் கொண்டு ஓடும்

இந்த உலகினில்,

சூறாவளி வீசும் பொழுது

விழுந்து எழும் மனிதனே!


நிதானம் தவறுகையில்

ஏற்படும் விளைவுகளையும்

அதன் பாதிப்புகளையும்

சந்திப்பது கடினம்.


அலைகள் ஆவேசமாய்

வீசும் பொழுது நாவடக்கமும் வேண்டும்;

பேசும் வார்த்தையில் குறையில்லாமல்,

நிதானம் என்ற நிழலான

நீர்த்துளியும் வேண்டும்.




தவறுகள் நேருவது

சகஜம் எனில்,

தர்க்கம் புரியாமல்

ஆழ்ந்து யோசித்து,

பின்வாங்காமல்,

நிலைதடுமாறாமல்

சரிசெய்து வாழ்வது

ஒரு அழகிய வாழ்வியல்.


புயல் ஓய்ந்த பின்னும், 

வேரூன்றி நிற்கும் மரம்போல், சோதனை சூழ்ந்த வேளையிலும் சோர்ந்திடாமல் தெளிவான மனதோடு நிதானம் காத்து நடந்திடின்

வெற்றி நம்மை சூழும்.


நம்முடைய இந்தப் பயணமானது,

அதிக சத்தமின்றி, மிதமான அமைதியோடு,

சலசலவென்று ஓடும் நதியைப் போல,

ஒவ்வொரு அடியையும் உணர்ந்து,

நிதானமான நடையோடு வாழ்ந்தால்,

மனிதனே!

நிம்மதி நிழலாய் உன்னைத் தொடரும்.


(Kavitha Arivalagan, Creative writers, Dharmapuri)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எம்எல்ஏ.க்களுக்கு கார்.. விவாதத்தில் சிக்கிய ஆபர்.. முதல்வர் விஜய்யின் அறிவிப்பு சரியா?

news

விஜய்யிடம் சீட் கேட்ட அந்த பிரபல டைரக்டர் இவரா? ஹாட் டாக்கான புஸ்ஸி ஆனந்த் பேச்சு

news

நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் எவ்வளவோ இருக்க.. எம்எல்ஏக்களுக்கு கார் எதுக்கு?.. சீமான்

news

உத்தரப் பிரதேச நீதிபதியிடமிருந்து 100 கொலை வழக்குகள் அதிரடி மாற்றம்.. அதிர வைக்கும் காரணம்!

news

செட்டிநாட்டு கிச்சன்.. இன்றைய ருசியான ரெசிபி.. அசத்தலான மட்டன் கிரேவி!

news

பாத்து பாத்து ஆசை அள்ள பரவசத்தில் மீசை துள்ள!

news

Varalakshmi Nonbu: வரலட்சுமி நோன்பு.. ஆகஸ்ட் 21ம் தேதியா இல்லை 28ஆ?

news

பாம்பன் சுவாமிகளே பக்தியின் பெருங்கடலே!

news

சரியான முடிவு

அதிகம் பார்க்கும் செய்திகள்