அமராவதி: ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசில் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார் பவன் கல்யாண்.
ஆந்திர மாநிலத்தில் 175 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 25 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதற்கு நடந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்த இந்தக் கூட்டணி, லோக்சபா தொகுதிகளையும் அள்ளியது.
சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் 135 இடங்களிலும், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா 21 இடங்களிலும், பா.ஜ.க 8 இடங்களிலும் வெற்றி பெற்றன. முதல்வராக சந்திரபாபு நாயுடு நேற்று பதவி ஏற்றார். கூடவே பவன் கல்யாண் உள்ளிட்ட அமைச்சர்களும் பதவியேற்றனர்.

இன்று அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. அதன்படி பவன்கல்யான் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஊரக நலத்துறை உள்ளிட்ட இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடகா செல்கிறார் முதல்வர் விஜய்
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
Tamil Poem: மருதாணி!
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி
காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்
நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்
{{comments.comment}}