மும்பை : one97 communications ன் பேடிஎம் நிறுவன தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான(COO- chief operating officer) பவேஷ் குப்தா திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
நொய்டாவில் செயல்பட்டு வரும் சிஇஓ அலுவலகத்தின் உயர்மட்ட ஆலோசனை குழுவை சேர்ந்த உயர்மட்ட நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்த ராஜினாமா செய்ததன் விளைவாக இவரும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
ஆனால் பவேஷ் குப்தா, தன்னுடைய தனிப்பட்ட காரணங்களுக்காக தான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. கம்பெனியின் பங்கு வர்த்தக நிலவரத்தை கருத்தில் கொண்டு மே 04ம் தேதி மாலைக்கு பிறகே பவேஷ் குப்தாவின் ராஜினாமா குறித்த தகவலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அது மட்டுமின்றி பேடிஎம் நிறுவனத்தின் தலைமை மாற்றம் குறித்த அறிவிப்பும் வெளியிட்டுள்ளது.
ஒட்டுமொத்த நிறுவனத்தையும் மறுகட்டமைப்பு செய்ய உள்ளதால் இந்த தலைமை நிர்வாக மாற்றம் செய்யப்பட உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பேடிஎம் மனியின் முன்னாள் தலைவர் வருண் ஸ்ரீதர், தற்காலிகமாக பேடிஎம் சர்வீசஸ் நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பை கவனிக்க உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. இவர் மியூச்சுவர் ஃபண்ட், நிதி மேலாண்மை ஆகியவற்றை பொறுப்பெடுத்து கவனிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதோடு fisdom stock broking business அமைப்பின் முன்னாள் சிஇஓ.,வாக இருந்த ராகேஷ் சிங், பேடிஎம் மனியின் புதிய சிஇஓ.,வாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பேடிஎம் வங்கி மீது ரிசர்வ் வங்கி பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதனால் பேடிஎம் நிறுவனம் தடுமாற்றத்தில் உள்ளது நினைவிருக்கலாம்.
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
{{comments.comment}}