கான் யூனிஸ், தெற்கு காஸா: காஸாவின் தெற்குப் பகுதியிலிருந்து இஸ்ரேல் ராணுவம் விலகியதைத் தொடர்ந்து அந்தப் பகுதிக்கு மக்கள் திரும்ப ஆரம்பித்துள்ளனர். அந்த ஊரில் எதுவுமே மிச்சம் இல்லை என்றும் எல்லாமே அழிந்து போய் விட்டதாகவும் மக்கள் கண்ணீருடன் கூறியுள்ளனரம்.
வீடுகள் எல்லாம் தரைமட்டமாகி விட்டது. மண்ணோடு மண்ணாகக் கிடக்கிறது. எங்களது வாழ்வாதாரங்கள் முழுமையாக அழிக்கப்பட்டு விட்டது. எங்கு பார்த்தாலும் மரணத்தின் வாசம்தான் வீசுகிறது. வெறும் குப்பை மேடு போல இருக்கிறது எங்களது ஊர். என்ன செய்யப் போகிறோம் என்று தெரியவில்லை என்று காஸா மக்கள் கண்ணீருடன் கூறினர்.
ராணுவத்தால் சிதிலமாக்கப்பட்டுள்ள கட்டட இடிபாடுகளில் பல பிணங்கள் கிடக்கின்றனவாம்., பல உடல்கள் அழுகிய நிலையில் இருப்பதால் அதை சரி செய்யும் பணியில் மக்கள் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

கான் யூனிஸ் நகரம் காஸாவின் தென் பகுதியில் உள்ளது. இங்கு கிட்டத்தட்ட 4 லட்சம் பேர் வசிக்கிறார்கள்.. இஸ்ரேல் ராணுவத்துக்கும் - ஹமாஸ் போராளிகளுக்கும் இடையிலான போரில் யூனிஸ் நகரமும் சிக்கிக் கொண்டது. இங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டனர். மீண்டும் திரும்பி வந்து பார்த்த மக்களுக்கு வெறும் மண் மேடும், கட்டடட இடிபாடுகளும்தான் மிச்சம் உள்ளன. பெரும்பாலான வீடுகள் சேதமடைந்து விட்டன.
இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் போராளிகளின் சண்டையில் சிக்கி நகரமே சின்னாபின்னமாகியுள்ளது. நகரின் அனைத்து முக்கியப் பகுதிகளும் சேதமடைந்துள்ளன. அல் சலாம் மருத்துவமனை கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இஸ்ரேல் படையினரின் குண்டு வீச்சில் இந்த மருத்துவமனையும் கடும் சேதமடைந்துள்ளது. அந்தக் கட்டடத்தை பயன்படுத்த முடியாத அளவுக்கு கடுமையாக சேதமடைந்து நிற்கிறது மருத்துவமனை.
கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி காஸா மீதான இஸ்ரேலிய ராணுவத்தின் தாக்குதல் தொடங்கியது. ஹமாஸ் போராளிகள், இஸ்ரேலுக்குள் புகுந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை சரமாரியாக சுட்டுக் கொன்றும், ஏவுகணை வீசித் தாக்கியும் கொன்றதைத் தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் தனது கோரத் தாக்குதலைத் தொடங்கியது நினைவிருக்கலாம். காஸாவை நிர்மூலமாக்கி விட்டு இப்போது இஸ்ரேல் ராணுவம் அங்கிருந்து வெளியேறியுள்ளது.
இஸ்ரேல் ராணுவத்தின் பதில் தாக்குதலில் கிட்டத்தட்ட 33,175 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}