மதுரை: மதுரை மாவட்டம் பாலமேடு கிராமத்தில் இன்று நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியின்போது பார்வையாளர்கள் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கு எதிரான பதாகை வைக்கப்பட்டிருந்துத பலரையும் கவர்ந்தது.
மதுரை மாவட்டத்தில் பொங்கல் விழாவையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் களை கட்டியுள்ளன. முதலில் நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடந்தேறியது. முதல் பரிசை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் 19 காளைகளைப் பிடித்து தட்டிச் சென்றார். அவருக்கு கார் பரிசாக அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று பாலமேடு கிராமத்தில் ஜல்லிக்கட்டு தொடங்கியுள்ளது. 1000 காளைகள், 900 காளையர்கள் என போட்டி அதிரடியாக போய்க் கொண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் இந்தப் போட்டியை திரண்டு வந்து பார்த்து ரசிக்கிறார்கள். ஏகப்பட்ட வெளிநாட்டுக்காரர்களும் போட்டியை கண்டு வியந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், பாலமேடு ஜல்லிக்கட்டைப் பார்வையிடும் மக்கள் வரிசையில் அரிட்டாபட்டியைக் காப்பாற்றுங்கள், டங்ஸ்டன் சுரங்கம் வேண்டாம் என்ற பதாகையும் இடம் பெற்றுள்ளது. மேலூர் அருகே அரிட்டாப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதித்துள்ளது. இதை எதிர்த்து அப்பகுதி கிராம மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் பல ஆயிரம் பொதுமக்கள் திரண்டு மதுரை நோக்கி ஊர்வலமாக வந்து போராட்டம் நடத்தி அதிர வைத்தனர் என்பது நினைவிருக்கலாம்.
இந்தத் திட்டம் வராது என்று தமிழ்நாடு அரசும் அறிவித்துள்ளது. நான் இருக்கும் வரை இத்திட்டம் வராது என்று முதல்வர் மு.க.ஸ்டாலினும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் இந்தத் திட்டம் வராது என்று தெரிவித்துள்ளார். இருப்பினும் திட்டம் முழுமையாக இதுவரை கைவிடப்படவில்லை என்பதால் மக்களின் போராட்டமும் தொடர்கிறது. அதன் எதிரொலியாகவே இந்த பாலமேடு பதாகை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Weather Update: தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்: வானிலை மையம் தகவல்!
இஸ்ரேலுக்கு கருணை காட்ட மாட்டோம்.. போர் தொடங்கி விட்டது.. ஈரான் மதத் தலைவர் கமேனி ஆவேசம்!
கீழடி அகழாய்வை நிராகரித்தால் .... முதல் குரலாக அதிமுகவின் குரல் ஒலிக்கும்: ஆர்.பி.உதயகுமார்
வாசக் கருவேப்பிலையே.. எடுத்து எரியாதீங்க.. அப்படியே சாப்பிடுங்க.. ரொம்ப நல்லது!
தொழில்துறை வளரவில்லை.. அமைச்சர் பிடிஆர் பேச்சுக்கு முதல்வரின் பதில் என்ன.. அன்புமணி கேள்வி!
SMART WATER ATM: சென்னையில் கட்டணமில்லா குடிநீர் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
3ம் நாட்டின் மத்தியஸ்தத்தை எப்போதும் இந்தியா ஏற்காது.. டிரம்ப்பிடம் கூறிய பிரதமர் மோடி
ரயில்வேயில் 6180 டெக்னீஷியன் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு
காலையிலேயே வருமான வரித்துறை அதிரடி.. சீஷெல் ஹோட்டல்களில் ரெய்டு.. சிக்கியது என்ன?
{{comments.comment}}