அரிட்டாபட்டியைக் காப்பாற்றுங்கள்.. டங்ஸ்டன் சுரங்கம் வேண்டாம்.. பாலமேடு ஜல்லிக்கட்டில் பதாகை!

Jan 15, 2025,10:26 AM IST

மதுரை: மதுரை மாவட்டம் பாலமேடு கிராமத்தில் இன்று நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியின்போது பார்வையாளர்கள் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கு எதிரான பதாகை வைக்கப்பட்டிருந்துத பலரையும் கவர்ந்தது.


மதுரை மாவட்டத்தில் பொங்கல் விழாவையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் களை கட்டியுள்ளன. முதலில் நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடந்தேறியது. முதல் பரிசை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் 19 காளைகளைப் பிடித்து தட்டிச் சென்றார். அவருக்கு கார் பரிசாக அளிக்கப்பட்டது.


இந்த நிலையில் இன்று பாலமேடு கிராமத்தில் ஜல்லிக்கட்டு தொடங்கியுள்ளது. 1000 காளைகள், 900 காளையர்கள் என போட்டி அதிரடியாக போய்க் கொண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் இந்தப் போட்டியை திரண்டு வந்து பார்த்து ரசிக்கிறார்கள். ஏகப்பட்ட வெளிநாட்டுக்காரர்களும் போட்டியை கண்டு வியந்து கொண்டுள்ளனர்.




இந்த நிலையில், பாலமேடு ஜல்லிக்கட்டைப் பார்வையிடும் மக்கள் வரிசையில் அரிட்டாபட்டியைக் காப்பாற்றுங்கள், டங்ஸ்டன் சுரங்கம் வேண்டாம் என்ற பதாகையும் இடம் பெற்றுள்ளது. மேலூர் அருகே அரிட்டாப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதித்துள்ளது. இதை எதிர்த்து அப்பகுதி கிராம மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் பல ஆயிரம் பொதுமக்கள் திரண்டு மதுரை நோக்கி ஊர்வலமாக வந்து போராட்டம் நடத்தி அதிர வைத்தனர் என்பது நினைவிருக்கலாம்.


இந்தத் திட்டம் வராது என்று தமிழ்நாடு அரசும் அறிவித்துள்ளது. நான் இருக்கும் வரை இத்திட்டம் வராது என்று முதல்வர் மு.க.ஸ்டாலினும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் இந்தத் திட்டம் வராது என்று தெரிவித்துள்ளார். இருப்பினும் திட்டம் முழுமையாக இதுவரை கைவிடப்படவில்லை என்பதால்  மக்களின் போராட்டமும் தொடர்கிறது. அதன் எதிரொலியாகவே இந்த பாலமேடு பதாகை என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்