சென்னை: புரட்டாசி மாதம் நாளை பிறப்பதால் இன்றைய ஞாயிற்றுக்கிழமையை இனிமையாக முடிக்க மக்கள் கறிக்கடைகள், மீன் கடைகளுக்கு படையெடுத்ததால் அங்கு கூட்டம் அலை மோதியது.
புரட்டாசி மாதம் பிறந்து விட்டால் அந்த ஒரு மாதமும் பெரும்பாலானவர்கள் அசைவம் சாப்பிட மாட்டார்கள். இதனால் இந்த ஒரு மாதமும் இறைச்சிக் கடைகளில் கூட்டம் சற்று குறைந்து காணப்படும். இந்த நிலையில் நாளை புரட்டாசி மாதம் பிறக்கிறது, கூடவே விநாயகர் சதுர்த்தியும் வருகிறது.

இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கட்டக்கடைசியாக ஒரு பிடி பிடித்துக் கொள்ளலாம் என்று மட்டன், சிக்கன், மீன் கடைகளுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர். சென்னையைப் பொறுத்தவரை அனைத்து இறைச்சிக் கடைகளில் நல்ல கூட்டம் காணப்பட்டது. காசிமேடு மீன் பிடி துறைமுகத்திலும் மீன் வரத்து வழக்கம் போல அதிகமாக இருந்தது. அதேபோல கூட்டமும் காணப்பட்டது. ஆனால் விலை பெரிதாக உயரவில்லை என்பதால் மக்கள் மகிழ்ச்சியுடன் நிறைய வாங்கிச் சென்றனர்.
கடலூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும் கூட மீன் விற்பனை இன்று அதிகமாக இருந்தது. சிக்கன் விற்பனையும் ஜோராக காணப்பட்டது. அதேசமயம், மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் நாளை விநாயகர் சதுர்த்தி வருகிறது என்பதால் இன்றே வீடுகளை சுத்தப்படுத்துவது உள்ளிட்ட காரணங்களால் இன்று அசைவம் சாப்பிடாமல் தவிர்த்ததையும் காண முடிந்தது. இதனால் மதுரையில் இறைச்சிக் கடைகளில் பெரிய அளவில் கூட்டம் இல்லாத நிலையும் காணப்பட்டது.

இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}