சென்னை: புரட்டாசி மாதம் நாளை பிறப்பதால் இன்றைய ஞாயிற்றுக்கிழமையை இனிமையாக முடிக்க மக்கள் கறிக்கடைகள், மீன் கடைகளுக்கு படையெடுத்ததால் அங்கு கூட்டம் அலை மோதியது.
புரட்டாசி மாதம் பிறந்து விட்டால் அந்த ஒரு மாதமும் பெரும்பாலானவர்கள் அசைவம் சாப்பிட மாட்டார்கள். இதனால் இந்த ஒரு மாதமும் இறைச்சிக் கடைகளில் கூட்டம் சற்று குறைந்து காணப்படும். இந்த நிலையில் நாளை புரட்டாசி மாதம் பிறக்கிறது, கூடவே விநாயகர் சதுர்த்தியும் வருகிறது.

இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கட்டக்கடைசியாக ஒரு பிடி பிடித்துக் கொள்ளலாம் என்று மட்டன், சிக்கன், மீன் கடைகளுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர். சென்னையைப் பொறுத்தவரை அனைத்து இறைச்சிக் கடைகளில் நல்ல கூட்டம் காணப்பட்டது. காசிமேடு மீன் பிடி துறைமுகத்திலும் மீன் வரத்து வழக்கம் போல அதிகமாக இருந்தது. அதேபோல கூட்டமும் காணப்பட்டது. ஆனால் விலை பெரிதாக உயரவில்லை என்பதால் மக்கள் மகிழ்ச்சியுடன் நிறைய வாங்கிச் சென்றனர்.
கடலூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும் கூட மீன் விற்பனை இன்று அதிகமாக இருந்தது. சிக்கன் விற்பனையும் ஜோராக காணப்பட்டது. அதேசமயம், மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் நாளை விநாயகர் சதுர்த்தி வருகிறது என்பதால் இன்றே வீடுகளை சுத்தப்படுத்துவது உள்ளிட்ட காரணங்களால் இன்று அசைவம் சாப்பிடாமல் தவிர்த்ததையும் காண முடிந்தது. இதனால் மதுரையில் இறைச்சிக் கடைகளில் பெரிய அளவில் கூட்டம் இல்லாத நிலையும் காணப்பட்டது.

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
தங்கம் விலை நேற்று குறைந்த நிலையில் இன்று உயர்வு.... சவரனுக்கு ரூ.240 உயர்வு!
Crab.. வீட்டுக்கு நண்டு வந்தா நல்லதா கெட்டதா?.. வாங்க தெரிஞ்சுக்கலாம்!
சொர்க்கமே என்றாலும் அது எங்கூரைப் போல வருமா.. வாக்கப்பட்ட மண்!
சட்டசபை அலங்கார முகப்புடன் அ.தி.மு.க பொதுக்குழு.. 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன!
Quick Tips: சப்பாத்தியை பல்லு இல்லாத தாத்தாவும் சாப்பிடுவாரு இப்படி தந்தா!
{{comments.comment}}