அடிக்குது குளிரு.. ராத்திரி 10 மணிக்கு மேல இவர்கள் எல்லாம் கவனமாக இருக்க வேண்டும்!

Dec 23, 2025,05:08 PM IST

- சுமதி சிவக்குமார் 


சின்ன சேலம்: இப்போது நிலவும் இந்தக் கடுமையான குளிரில், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் இரவு 10 மணிக்குத் தூங்கிய பிறகு திடீரென எழுந்திருக்கக் கூடாது என்று மருத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள்.


தற்போது வீசி வரும் கடும் பனி மற்றும் குளிரின் காரணமாக உடலில் உள்ள இரத்தம் கெட்டியாகி, மெதுவாகச் செயல்பட்டு இதயத்தை முழுமையாக அடையாமல், உடலில் தங்கிவிடும். இதனால், குளிர்கால மாதங்களில், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாரடைப்பு காரணமாக அதிக விபரீத பாதிப்புகள் ஏற்படுமாம். 


எனவே கடும் குளிர்காலத்தில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தூங்கும்போது காலையிலோ அல்லது இரவிலோ சிறுநீர் கழிக்க வேண்டியிருப்பவர்களுக்கு சிறப்புத் தகவல் ஒன்று உண்டு.




அதாவது படுக்கையை விட்டு எழுந்ததும் ஒரு மூன்றரை நிமிடங்களில் ஒவ்வொருவரும் கவனமாக இருக்க வேண்டும். இந்த மூன்றரை நிமிடங்கள் திடீர் மரணங்களின் எண்ணிக்கையைக் குறைக்க உதவும் என்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போதெல்லாம் ஆரோக்கியமானவர்கள் கூட இரவில் இறக்கின்றனர்.


அப்படி என்னதான் நடக்கும்?


இதற்கு முக்கிய காரணம், இரவில் சிறுநீர் கழிக்கச் செல்லும் ஒவ்வொரு முறையும், திடீரென எழுந்திருப்பதால் இரத்தம் மூளைக்குச் செல்வதில்லை.


நாம் நடு இரவில் சிறுநீர் கழிக்க எழுந்திருக்கும் போது, நமது ECG முறை மாறக்கூடும். ஏனென்றால், நாம் திடீரென எழுந்திருக்கும் போது, இரத்தம் மூளைக்குச் செல்லாது, நமது இதயம் செயல்படுவதை நிறுத்திவிடும்.


எனவே இந்த சமயத்தில் நாம் கீழ்க்கண்டவற்றை பின்பற்றலாம்.


1. எழுந்தவுடன் உடனே நடக்காதீர்கள். அரை நிமிடம் படுக்கையில் விழித்தபடி படுத்திருங்கள்.

2. அடுத்த அரை நிமிடம் படுக்கையில் எழுந்து உட்காருங்கள்.

3. அடுத்த இரண்டரை நிமிடங்களுக்கு உங்கள் கால்கள் படுக்கைக்கு அடியில் தொங்கட்டும்


மூன்றரை நிமிடங்களுக்குப் பிறகு, உங்கள் மூளை இனி இரத்தம் இல்லாமல் இருக்காது, உங்கள் இதயம் செயல்படுவதை நிறுத்தாது. அதன் பிறகு சிறுநீர் கழிக்க போகலாம். இது திடீர் மரணங்களையும் குறைக்கும்.


(சுமதி சிவக்குமார், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Double Meaning talks: மனிதர்கள் எப்போது டபுள் மீனிங் + கெட்ட வார்த்தையில் பேச ஆரம்பிக்கிறார்கள்?

news

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2026 : அறிவிக்கப்பட்ட திட்டங்களும், ஒதுக்கப்பட்ட நிதியும்

news

தமிழக வேளாண் பட்ஜெட் விவசாயிகள் ஏமாற்றம்...எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

news

புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையனுடன் அதிமுக அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் திடீர் சந்திப்பு

news

பிரதமர் மோடியின் 2026-ஆம் ஆண்டு வெளிநாட்டு பயணச் செலவு: மத்திய அரசு வெளியிட்ட தகவல்!

news

“வெற்றிப் பயணம் தொடரட்டும்!”: அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

news

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2026-27: திமுக, தேமுதிக.,வின் கருத்து என்ன?

news

முருக பக்தியின் மகத்துவம் பேசும் ஆடி கிருத்திகை –காவடி, பால்குடம், பக்தி பேரலை

news

பெண்களை அச்சுறுத்தும் ‘முடக்கு வாதம்’: அறிகுறிகளும், கண்டறியும் வழிகளும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்