சென்னை: தமிழ்நாடு முழுவதும் பிளஸ் டூ தேர்வு ரிசல்ட் இன்று வெளியானது. கடந்த ஆண்டு 94.3% பேர் தேர்ச்சி பெற்ற நிலையில் இந்த ஆண்டு 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.
பிளஸ் டூ பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1ஆம் தேதி தொடங்கி மார்ச் 22 வரை நடைபெற்றது. இந்த பிளஸ் டூ பொதுத்தேர்வில் 3,58,201 மாணவர்கள் மற்றும் 4, 13,998 மாணவிகளும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் பிளஸ் டூ தேர்வு எழுதினர். இதற்கான தேர்வு முடிவு இன்று வெளியானது.
+2 பொதுத்தேர்வில் தேர்வு எழுதியோரில் மொத்தமாக 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 92.37% மாணவர்களும், 96.44% சதவீத மாணவியரும் வெற்றி பெற்றுள்ளனர்.

பிளஸ் டூ தேர்வில் 97.45 சதவீதம் தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. ஈரோடு மற்றும் சிவகங்கை மாவட்டம் தலா 97.42 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளன. அரியலூர் மாவட்டம் 97.25 சதவீத தேர்ச்சியுடன் 3வது இடத்தைப் பிடித்துள்ளது. நான்காவது இடத்தில், கோயம்பத்தூர் 96.97% தேர்ச்சி பெற்றுள்ளது.
தமிழ் பாடத்தில் 35 பேர் நூற்றுக்கு நூறு
தமிழ் பாடத்தில் 35 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். ஆங்கிலத்தில் ஏழு பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக கணினி அறிவியலில் 6,996 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். வணிகவியல் பாடத்தில் 6142 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். பொருளியலில் 3,299 பேரும், கணிதத்தில் 2,587 பேரும், உயிரியலில் 652 பேரும், வேதியலில் 471 பேரும், தாவரவியலில் 90 பேரும், விலங்கியலில் 382 பேரும், கணக்குப்பதிவியலில் 1647 பேரும், கணினி பயன்பாடுகள் பாடத்தில் 2251 பேரும், வணிக கணிதம் மற்றும் புள்ளியல் பாடத்தில் 210 பேரும், இயற்பியலில் 633 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் 397 அரசு பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 91.32 சதவீதமும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 95.49 சதவீதமும், தனியார் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 96.70% சதவிகிதமும் இருபாலர் பள்ளிகளில் 94.70 சதவீதமும் பாஸாகியுள்ளனர். மகளிர் பள்ளிக்கூடங்களில் தேர்ச்சி விகிதம் 96.39%. ஆகும்.
புதுச்சேரியில் 92.41% வெற்றி
புதுச்சேரியில் 92.41% மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றனர். புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பிளஸ்டூ தேர்வு எழுதிய 14,012 மாணவர்களில் 12,948 பேர் தேர்ச்சி அடைந்தனர். புதுச்சேரியில் 93.38% பேரும், காரைக்காலில் 87.03 சதவீதம் பேர் பாஸ் ஆகியுள்ளனர்.
வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி
காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்
நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்
இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி
Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?
ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்
சிந்தனைச் சிதறல்... இறையும் இயற்கையும் இரண்டறக் கலந்த ஒன்றே!
செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்.. களை கட்டும் ஆடி முளைக்கொட்டு திருவிழா!
{{comments.comment}}