டெல்லி: நாடாளுமன்றத்தில் நேற்று மிகப் பெரிய நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் ராகுல் காந்தி. வரம்புகளை மீறி விட்டார். சிறுபிள்ளைத்தனமாக செயல்படுகிறார். இவர்கள் மிகுந்த உள்நோக்கத்துடன், விஷமத்தனத்துடன் செயல்படுகிறார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்குப் பதில் அளித்து பிரதமர் மோடி ஆற்றிய உரை:
சபாநாயகர் அவர்களே கடினமான நேரத்திலும் கூட நீங்கள் புன்னகை பூத்த முகத்துடன் இருக்கிறீர்கள். ஆனால் நேற்று அவையில் நடந்தது மிகமிக தீவிரமானது. அவையின் மாண்பை சீர்குலைத்து விட்டனர். அவர்கள் மிகுந்த மோசமான உள்நோக்கத்துடன் இருக்கிறார்கள். இதை சாதாரண செயலாக கருத முடியாது.
எதிர்க்கட்சித் தலைவர் வரம்பு மீறி விட்டார். அவையின் மாண்பை குலைத்து விட்டார். சிறுபிள்ளைத்தனமாக செயல்படுகிறார். அக்னவீர் தொடர்பாக பொய் பேசுகிறார்கள். குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து பொய் பேசுகிறார்கள். இட ஒதுக்கீடு குறித்தும் பொய்யாக பேசுகிறார்கள். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், அரசியல் சாசனச் சட்டம், எல்ஐசி என எல்லாவற்றிலும் பொய்தான் பேசுகிறார்கள்.
மக்கள் அவர்களது வங்கிக் கணக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அனுதாபம் தேட புதிய நாடகத்தை அவர்கள் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பலர் ஊழல் வழக்குகளில் சிக்கி ஜாமீனில் வெளியே வந்து நடமாடிக் கொண்டுள்ளனர். சுப்ரீம் கோர்ட்டில் பொறுப்பற்ற முறையில் பேசியதற்காக மன்னிப்பு கேட்ட கதையையும் நாம் பார்த்தோம்.
நாட்டில் அமைதியின்மையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது காங்கிரஸ். குடியுரிமைச் சட்டம் தொடர்பாக அவர்கள் மக்களிடையே கலகத்தை ஏற்படுத்தினர்.
தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!
செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?
செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி
திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!
Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!
பாஜக உட்கட்சி பூசல் தான் அதிமுக.,வில் ஏற்படும் குழப்பத்திற்கு காரணமா?
கோபியில் கொதித்த செங்கோட்டையன்.. திண்டுக்கல்லில் கொந்தளித்த இபிஎஸ்... பரபரப்பில் அதிமுக
பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் ஆவேசம்
மலைக்கோட்டை, பாண்டியன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.. நவ. 10 வரை
{{comments.comment}}