கன்னியாகுமரி: பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கிய தியானம், இன்று 2வது நாளாக விவேகானந்தர் மண்டபத்தில் தொடர்ந்து கொண்டுள்ளது.
மக்களவைத் தேர்தலின் இறுதிக் கட்ட வாக்குப் பதிவு நாளை நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி உள்ளிட்ட 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
சூரியனை வணங்கிய பின்னர் 2வது நாள் தியானம்

இந்நிலையில் பிரதமர் மோடி கன்னியாகுமரியில் கடல் நடுவில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் நேற்று தியானத்தை தொடங்கி, இன்றும் தியானம் செய்து வருகிறார். இன்று காலை சூரிய உதயத்தை பார்த்த நமஸ்காரம் செய்த பின்னர் தியான மண்டபத்திற்குள் சென்றார். அங்கு விவகானந்தர் சிலை முன்னர் அமர்ந்து காவி உடை மற்றும் கையில் ருத்திராட்சை மாலையுடன் தியானம் மேற்கொண்டு வருகிறார்.
நாளை மாலை வரை, அதாவது கிட்டத்தட்ட 45 மணி நேரம் பிரதமர் மோடி தியானம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று சுற்றுலா பயணிகள் யாரும் விவேகானந்தர் பாறைக்கு அனுமதிக்கப்பட வில்லை. இன்று சுற்றுலா பயணிகள் தீவிர சோதனைக்கு பின்னர் விவேகானந்தர் பாறைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
சோதனைக்குப் பின்னர் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி:

பிரதமர் இருக்கும் பகுதிக்கு யாருக்கும் அனுமதியில்லை. மற்ற பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
தியானம் முடிந்து நாளை மாலை 3 மணியளவில் அவர் வெளியே வருகிறார். அதன் பின்னர் கன்னியாகுமரியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டுச் சென்று அங்கிருந்து விமானம் மூலமாக டெல்லி செல்கிறார்.
பிரதமர் மோடியின் தங்கலை முன்னிட்டு குமரி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடற்கரை, ரவுண்டானா சந்திப்பு, மகாதானபுரம் சந்திப்பு மற்றும் குமரி மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் 4000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். விவகானந்தர் பாறையை சுற்றி கடற்படை கப்பலில் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}