கன்னியாகுமரி: பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கிய தியானம், இன்று 2வது நாளாக விவேகானந்தர் மண்டபத்தில் தொடர்ந்து கொண்டுள்ளது.
மக்களவைத் தேர்தலின் இறுதிக் கட்ட வாக்குப் பதிவு நாளை நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி உள்ளிட்ட 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
சூரியனை வணங்கிய பின்னர் 2வது நாள் தியானம்

இந்நிலையில் பிரதமர் மோடி கன்னியாகுமரியில் கடல் நடுவில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் நேற்று தியானத்தை தொடங்கி, இன்றும் தியானம் செய்து வருகிறார். இன்று காலை சூரிய உதயத்தை பார்த்த நமஸ்காரம் செய்த பின்னர் தியான மண்டபத்திற்குள் சென்றார். அங்கு விவகானந்தர் சிலை முன்னர் அமர்ந்து காவி உடை மற்றும் கையில் ருத்திராட்சை மாலையுடன் தியானம் மேற்கொண்டு வருகிறார்.
நாளை மாலை வரை, அதாவது கிட்டத்தட்ட 45 மணி நேரம் பிரதமர் மோடி தியானம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று சுற்றுலா பயணிகள் யாரும் விவேகானந்தர் பாறைக்கு அனுமதிக்கப்பட வில்லை. இன்று சுற்றுலா பயணிகள் தீவிர சோதனைக்கு பின்னர் விவேகானந்தர் பாறைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
சோதனைக்குப் பின்னர் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி:

பிரதமர் இருக்கும் பகுதிக்கு யாருக்கும் அனுமதியில்லை. மற்ற பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
தியானம் முடிந்து நாளை மாலை 3 மணியளவில் அவர் வெளியே வருகிறார். அதன் பின்னர் கன்னியாகுமரியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டுச் சென்று அங்கிருந்து விமானம் மூலமாக டெல்லி செல்கிறார்.
பிரதமர் மோடியின் தங்கலை முன்னிட்டு குமரி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடற்கரை, ரவுண்டானா சந்திப்பு, மகாதானபுரம் சந்திப்பு மற்றும் குமரி மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் 4000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். விவகானந்தர் பாறையை சுற்றி கடற்படை கப்பலில் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}