உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு பதிலடி தர வேண்டும் - பிரதமர் மோடி கூறியதாக தகவல்

Sep 06, 2023,06:28 PM IST

டெல்லி: தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மம் குறித்து பேசிய பேச்சுக்கு சரியான பதிலடி தர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும் சனாதன தர்மத்தை டெங்கு, கொரோனா வைரஸ் ஆகியவற்றுடன் ஒப்பிட்டு அவர் பேசியிருந்தார்.


இந்தப் பேச்சுக்கு கண்டனங்களும், ஆதரவும் எழுந்துள்ளது. இந்த நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் காவல் நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் உதயநிதி ஸ்டாலின் தனது நிலையிலிருந்து கொஞ்சம் கூட மாறவில்லை. அதை விட முக்கியமாக, புதிய நாடாளுமன்றத் திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை அழைக்கவில்லை. இதுதான் சனாதன தர்மத்தின் அடிப்படையிலான ஜாதிய பாகுபாட்டுக்கு லேட்டஸ்ட் உதாரணம் என்றும் அவர் கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார்.


அவரது இந்தக் குற்றச்சாட்டு நாடு முழுவதும் பேசு பொருளாகியுள்ளது. இதை தொடர்ந்து தற்போது பிரதமர் நரேந்திர மோடி இந்த விவகாரம் குறித்து ரியாக்ஷன் காட்டியுள்ளார். இன்று டெல்லியில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது எந்த மதத்தையும் யாரும் தவறாகப் பேசக் கூடாது. சனாதன தர்மம் குறித்து அவதூறாகப் பேச யாருக்கும் உரிமை இல்லை. அப்படி யாரேனும் தவறாக பேசினால் அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இன்று ஆசியான் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்தோனேசியா செல்லும் முன்பு நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இப்படி பிரதமர் மோடி கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்தியா - பாரத் பெயர் தொடர்பாக ஆளாளுக்கு  பேசக் கூடாது என்றும், இதுகுறித்த கருத்து கூற அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே பேச வேண்டும் என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தியதாக தெரிகிறது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்