சென்னை: சென்னை - நாகர்கோவில், மதுரை-பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க வரும் 20ம் தேதி சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
பிரதமர் மோடி வரும் 20ம் தேதி வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க சென்னை வருகிறார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ள நிலையில் முதல் முறையாக தமிழ்நாட்டுக்கு வருகிறார் பிரதமர் மோடி. அதேசமயம், தென்னிந்தியாவில் தமிழ்நாடு, புதுச்சேரியைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் பாஜகவுக்கு சில இடங்கள் கிடைத்த நிலையில் தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் மட்டும் அனைத்துத் தொகுதிகளிலும் பாஜக தோல்வியைத் தழுவிய நிலையில் பிரதமர் வருவது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி சென்னை வருவதை முன்னிட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தெற்கு ரயில்வே சார்பில் சென்னை சென்ட்ரல் - கோவை, சென்னை சென்ட்ரல் - மைசூர், சென்னை சென்ட்ரல் - விஜயவாடா, திருவனந்தபுரம் - காசர்கோடு, சென்னை எழும்பூர் - நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர சென்னை எழும்பூர் - நாகர்கோயில் இடையே வாராந்திர வந்தே பாரத் ரயில் சேவையும் இயக்கப்படுகிறது.

இந்நிலையில் சென்னை எழும்பூர் - நாகர்கோயில் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலை தினசரி ரயில் சேவையாக இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்து வந்தனர். அத்துடன் ரயில் வாரியத்திற்கும் பரிந்துரை செய்தனர். பரிந்துரையின் அடிப்படையில் சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே தினசரி வந்தே பாரத் ரயில் சேவையை இயக்க அனுமதி அளித்துள்ளது.
இதுதவிர புதிதாக மதுரை - பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த ரயில் சேவைகளைத் தொடங்கி வைக்கவே பிரதமர் மோடி வரும் 20ம் தேதி சென்னை வருகிறார். பிரதமர் வருகையை ஒட்டி ரயில்வே அதிகாரிகள் அதற்கான முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}