எக்ஸ் தளத்தில் யாரு "டாப்"?: மோடிக்கு அடுத்த இடத்தில் இவரா??

Sep 05, 2023,05:04 PM IST
புதுடெல்லி: கடந்த 30 நாட்களில் ‘எக்ஸ்’ சமூக வலைதளப்பக்கத்தில் அதிக புதிய பாலோயர்களை பெற்ற இந்திய அரசியல்வாதிகளில் பிரதமர் மோடி முதலிடத்திலும், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் 2வது இடத்திலும் உள்ளனர்.

டுவிட்டர் சமூக வலைதள நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க், அதன் பெயரை ‘எக்ஸ்’ என சமீபத்தில் மாற்றினார். இந்த நிலையில் ‘எக்ஸ்’ சமூக வலைதளம் சார்பில் அதில் கணக்கு வைத்துள்ள தனி நபர், நிறுவனங்கள், அறக்கட்டளைகள் போன்றவைகளின் கணக்குகளில் கடந்த ஒரு மாதத்தில் (30 நாட்களில்) அதிகரித்த பாலோயர்களின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளது.



இஸ்ரோவுக்கு மவுசு

இதில் இந்தியாவில் ஒரு மாதத்தில் அதிக பாலோயர்களை கொண்ட கணக்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் எனப்படும் இஸ்ரோ உள்ளது. சுமார் 11,66,140 பாலோயர்களை இஸ்ரோ கூடுதலாக பெற்றுள்ளது.

அரசியல்வாதிகளில் முதலிடத்தில் இருக்கிறார் பிரதமர் மோடி. அவரது பாலோயர்கள் எண்ணிக்கை 6.32 லட்சம் அதிகரித்துள்ளது. அவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத். இவர் ஒரு மாதத்தில் 2.67 லட்சம் பாலோயர்களை அதிகம் பெற்றுள்ளார். மூன்றாவது இடத்தில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி உள்ளார்.



விராட் கோலி



இதன்மூலம் சமூக வலைதளங்களில் பிரதமர் மோடிக்கு அடுத்ததாக வேகமாக வளர்ந்துவரும் அரசியல் பிரபலமாக யோகி ஆதித்யநாத் திகழ்வது தெரிகிறது. இந்திய அளவில் இஸ்ரோ முதலிடத்திலும், பிரதமர் மோடி 2வது இடத்திலும், 4,74,011 புதிய பாலோயர்களுடன் கிரிக்கெட் வீரர் விராட் கோலி 3வது இடத்திலும், யோகி ஆதித்யநாத் 4வது இடத்திலும் உள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்