டெல்லி: பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி இன்று முற்பகல் 11.30 மணிக்கு பிரதமர் அலுவலகம் சென்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து பிரதம மந்திரி கிஷான் நிதி என்ற விவசாயிகள் நல நிதித் திட்டம் தொடர்பான கோப்பில் அவர் முதல் கையெழுத்திட்டார்..
3வது முறையாக பிரதமராக நேற்று பதவியேற்றுக் கொண்டார் நரேந்திர மோடி. கூடவே 71 அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர். இந்த நிலையில் இன்று முற்பகல் 11. 30 மணிக்கு தனது அலுவலகம் சென்று பொறுப்பேற்றுக் கொண்டார் பிரதமர் மோடி. அதேபோல அமைச்சர்களும் அவரவர் அலுவலகம் சென்று பொறுப்பேற்கவுள்ளனர்.

பிரதமர் மோடியின் இன்றைய முதல் முன்னுரிமை அமைச்சரவைக் கூட்டம்தான். மாலை 5 மணிக்கு முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது. அமைச்சரவைக் கூட்டத்தில் மக்களவைக் கூட்டத்தை கூட்டுமாறு குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை வைத்து தீர்மானம் நிறைவேற்றப்படும். இன்று மாலை நடைபெறும் கேபினட் கூட்டத்தைத் தொடர்ந்து அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.
இதைத் தொடர்ந்து நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டம் கூட்டப்பட்டு அதில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுவார். அதன் பின்னர் தற்காலிக சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு எம்.பிக்கள் பதவியேற்பு நடத்தப்படும். இதைத் தொடர்ந்து சபாநாயகர் தேர்தல் நடைபெறும்.
சபாநாயகராக யார் தேர்வு செய்யப்படப் போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக உள்ளது. சபாநாயகர் பதவியை தெலுங்கு தேசம் கட்சி கேட்டு வந்தது. கடந்த வாஜ்பாய் ஆட்சியின்போது லோக்சபா சபாநாயகர் பதவி தெலுங்கு தேசம் கட்சிக்குக் கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இம்முறை அதைத் தர பாஜக மறுத்து வருவதாக சொல்லப்படுகிறது. எனவே சபாநாயகர் பதவியில் யார் அமரப் போகிறார் என்பது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
நெல்லையப்பர் கோயிலில் நடிகர் தனுஷின் சிறப்பு தரிசனம்!
அக்கி ரொட்டி சாப்பிட்டிருக்கீங்களா.. செம டேஸ்ட்டி.. சூப்பர் சிற்றுண்டி பாஸ்!
மனித உரிமைகளே மக்களின் உணர்வுகள்.. இன்று என்ன நாள் தெரியுமா!
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
வைக்கத்தாஷ்டமி திருவிழா ... வைக்கம் ஸ்தலத்தின் சிறப்புகளை அறிவோம்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
{{comments.comment}}