சென்னை: தமிழகத்திற்கு இரண்டு புதிய வந்தே பாரத் ரயில் சேவையை காணொளி வாயிலாக 31ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாட்டில் மக்கள் ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதற்கு ரயில் சேவை மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. அதிலும் இதன் பயண செலவு மிகமிக குறைவு என்பதால் பேருந்துகளை விட ரயில்களையே மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர். இதனால் நீண்ட தூரம் பயணிக்க ரயில்கள் மிகவும் சௌகரியமாக இருப்பதாலும் மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த வந்தே வாரத் ரயில் சேவை மிகக் குறைந்த நேரத்தில் சென்றடைவதால் இந்த ரயில்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு எழுந்து வருகின்றது. அதன்படி தமிழகத்தில் சென்னை-கோவை, சென்னை-நெல்லை, சென்னை-பெங்களூர், கோவை-பெங்களூர், சென்னை-விஜயவாடா உள்ளிட்ட வழித்தடங்களில் பல்வேறு வந்தே பாரத் ரயில் சேவைகள் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து தமிழகத்திற்கு மேலும் இரண்டு புதிய வந்தே பாரத் ரயில் சேவைகள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக தொடங்கி வைக்கிறார். அதில் நாகர்கோவில் டூ சென்னை எழும்பூர், மதுரை டூ பெங்களூர் கண்டோமென்ட் என இரண்டு புதிய வந்தே பாரத் ரயில் சேவை வரும் 31ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே கூறுகையில், சென்னை - நாகர்கோவில் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை புதன்கிழமை தவிர வாரத்தில் ஆறு நாட்களும் இயக்கப்படும். அதேபோல் பெங்களூர் டூ மதுரை இடையே வந்தே பாரத் ரயில் சேவை செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தில் ஆறு நாட்களும் இயக்கப்பட உள்ளது. இந்த இரண்டு ரயில் சேவைகளையும் வரும் 31ஆம் தேதி முதல் காணொளி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்த ரயில் திட்டங்கள் உட்பட பல்வேறு திட்டங்களையும் பிரதமர் அன்று தொடங்கி வைக்க இருக்கிறார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}