Vande Bharat Express: சென்னை டூ நெல்லை.. தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

Sep 24, 2023,01:06 PM IST

சென்னை: சென்னை திருநெல்வேலி இடையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.


இன்று ஒரே நாளில் 9 வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் டெல்லியில் இருந்தபடி தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இன்று இரண்டு வந்தே பாரத் ரயில்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. நெல்லை - சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் விஜயவாடா - சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில்களே அவை.




நெல்லை டூ சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், தாம்பரம் வழியாக சென்னை வந்து சேரும். இதன் பயண நேரம் 7 மணி 50 நிமிடங்களாகும்.  வழக்கமான ரயில்களில் 12 மணி நேர பயணம் செய்து நெல்லையிலிருந்து சென்னை வர வேண்டியிருக்கும். ஆனால் வந்தே பாரத் ரயிலில் 8 மணி நேரத்துக்குள் வர முடியும் என்பதால் மக்களிடையே இது வரவேற்பைப் பெறும் என்று தெரிகிறது.


இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்த பிற வந்தே பாரத் ரயில்கள்:


உதய்ப்பூர் - ஜெய்ப்பூர்

ஹைதராபாத் - பெங்களூரு

பாட்னா - ஹவுரா

காசர்கோடு - திருவனந்தபுரம்

ரூர்கேலா - புவனேஸ்வர் - பூரி

ராஞ்சி - ஹவுரா

ஜாம்நகர் - அகமதாபாத்


சமீபத்திய செய்திகள்

news

ஓர் நதி ஓர் பெளர்ணமி ஓர் ஓடம்!

news

Forget your age... சாதிக்கும் எண்ணம் இருக்கும் வரை.. என்றும் நீங்கள் இளையவரே!

news

மாம்பழ பரிசு.. விஷாலின் விளையாட்டுகள் (12)

news

நெருக்கடியான தெருவில் கடைகளுக்கு நடுவே விடுதி.. அமர்நாத் பயண அனுபவங்கள் (2)

news

Paytm ஆப் வேலை செய்யுமா?.. மத்திய அரசு உத்தரவு கூறுவது என்ன?

news

சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!

news

Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்

news

Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)

news

தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?

அதிகம் பார்க்கும் செய்திகள்