Vande Bharat Express: சென்னை டூ நெல்லை.. தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

Sep 24, 2023,01:06 PM IST

சென்னை: சென்னை திருநெல்வேலி இடையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.


இன்று ஒரே நாளில் 9 வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் டெல்லியில் இருந்தபடி தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இன்று இரண்டு வந்தே பாரத் ரயில்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. நெல்லை - சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் விஜயவாடா - சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில்களே அவை.




நெல்லை டூ சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், தாம்பரம் வழியாக சென்னை வந்து சேரும். இதன் பயண நேரம் 7 மணி 50 நிமிடங்களாகும்.  வழக்கமான ரயில்களில் 12 மணி நேர பயணம் செய்து நெல்லையிலிருந்து சென்னை வர வேண்டியிருக்கும். ஆனால் வந்தே பாரத் ரயிலில் 8 மணி நேரத்துக்குள் வர முடியும் என்பதால் மக்களிடையே இது வரவேற்பைப் பெறும் என்று தெரிகிறது.


இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்த பிற வந்தே பாரத் ரயில்கள்:


உதய்ப்பூர் - ஜெய்ப்பூர்

ஹைதராபாத் - பெங்களூரு

பாட்னா - ஹவுரா

காசர்கோடு - திருவனந்தபுரம்

ரூர்கேலா - புவனேஸ்வர் - பூரி

ராஞ்சி - ஹவுரா

ஜாம்நகர் - அகமதாபாத்


சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்