சென்னை: சென்னை திருநெல்வேலி இடையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
இன்று ஒரே நாளில் 9 வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் டெல்லியில் இருந்தபடி தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இன்று இரண்டு வந்தே பாரத் ரயில்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. நெல்லை - சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் விஜயவாடா - சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில்களே அவை.
நெல்லை டூ சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், தாம்பரம் வழியாக சென்னை வந்து சேரும். இதன் பயண நேரம் 7 மணி 50 நிமிடங்களாகும். வழக்கமான ரயில்களில் 12 மணி நேர பயணம் செய்து நெல்லையிலிருந்து சென்னை வர வேண்டியிருக்கும். ஆனால் வந்தே பாரத் ரயிலில் 8 மணி நேரத்துக்குள் வர முடியும் என்பதால் மக்களிடையே இது வரவேற்பைப் பெறும் என்று தெரிகிறது.
இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்த பிற வந்தே பாரத் ரயில்கள்:
உதய்ப்பூர் - ஜெய்ப்பூர்
ஹைதராபாத் - பெங்களூரு
பாட்னா - ஹவுரா
காசர்கோடு - திருவனந்தபுரம்
ரூர்கேலா - புவனேஸ்வர் - பூரி
ராஞ்சி - ஹவுரா
ஜாம்நகர் - அகமதாபாத்
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}