சென்னை: சென்னை திருநெல்வேலி இடையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
இன்று ஒரே நாளில் 9 வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் டெல்லியில் இருந்தபடி தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இன்று இரண்டு வந்தே பாரத் ரயில்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. நெல்லை - சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் விஜயவாடா - சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில்களே அவை.
நெல்லை டூ சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், தாம்பரம் வழியாக சென்னை வந்து சேரும். இதன் பயண நேரம் 7 மணி 50 நிமிடங்களாகும். வழக்கமான ரயில்களில் 12 மணி நேர பயணம் செய்து நெல்லையிலிருந்து சென்னை வர வேண்டியிருக்கும். ஆனால் வந்தே பாரத் ரயிலில் 8 மணி நேரத்துக்குள் வர முடியும் என்பதால் மக்களிடையே இது வரவேற்பைப் பெறும் என்று தெரிகிறது.
இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்த பிற வந்தே பாரத் ரயில்கள்:
உதய்ப்பூர் - ஜெய்ப்பூர்
ஹைதராபாத் - பெங்களூரு
பாட்னா - ஹவுரா
காசர்கோடு - திருவனந்தபுரம்
ரூர்கேலா - புவனேஸ்வர் - பூரி
ராஞ்சி - ஹவுரா
ஜாம்நகர் - அகமதாபாத்
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
{{comments.comment}}