கன்னியாகுமரி: விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தங்கி தியானம் செய்து வரும் பிரதமர் மோடி இன்று பிற்பகல் 2. 30 மணியளவில் அங்கிருந்து வெளியேறுகிறார். அதன் பின்னர் திருவள்ளுவர் சிலைக்குச் சென்று அஞ்சலி செலுத்தி சுற்றிப் பார்க்கவுள்ளார்.
3 நாள் ஆன்மீக பயணமாக பிரதமர் மோடி கன்னியாகுமரியில் தியானம் செய்து வருகிறார். கடந்த மே 30ம் தேதி கன்னியாகுமரி வந்த பிரதமர் முதலில் பகவதி அம்மன் கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டார். இதைத் தொடர்ந்து அவர் விவேகானந்தர் பாறையில் உள்ள தியான மண்டபத்திற்குச் சென்றார். அங்கு தொடர்ந்து தியானம் செய்து வருகிறார். இடை இடையே விவேகானந்தர் மண்டபத்துக்குள்ளேயே அவர் வாக்கிங்கும் போய்க் கொள்கிறார்.
மண்டப வளாகத்திலிருந்தே திருவள்ளுவர் சிலையையும் அவர் தினசரி கண்டு களித்தார். இந்த நிலையில், இன்று தியானம் முடிந்து விவேகானந்தர் பாறை மண்டபத்திலிருந்து பிற்பகல் 2.30 மணிக்கு அவர் வெளியே வருகிறார். தனி படகு மூலம் அவர் திருவள்ளுவர் சிலைக்குச் செல்கிறார். அங்கு சிலையைச் சுற்றிப் பார்க்கிறார். அஞ்சலி செலுத்துகிறார். அதை முடித்துக் கொண்ட பின்னர் மீண்டும் விவேகானந்தர் பாறைக்குத் திரும்பும் பி ரதமர் மோடி, தனிப் படகு மூலம் விருந்தினர் மாளிகைக்குச் செல்கிறார்.
அங்கிருந்து அவர் ஹெலிகாப்டர் தளத்துக்குச் சென்று ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டுச் சென்று அங்கிருந்து விமானம் மூலமாக டெல்லி செல்கிறார். பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் இன்று தேர்தல் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை:
பிரதமர் திருவள்ளுவர் சிலைக்குச் செல்லவுள்ளதால் விவேகானந்தர் நினைவு மண்டபம் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல படகு குழாமிலும் படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் படகு பயணம் செய்ய முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளனர். வெளியூர்களிலிருந்து வந்தவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடி, விவேகானந்தர் பாறையிலிருந்து கிளம்பிச் சென்ற பிறகே சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}