கன்னியாகுமரி: விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தங்கி தியானம் செய்து வரும் பிரதமர் மோடி இன்று பிற்பகல் 2. 30 மணியளவில் அங்கிருந்து வெளியேறுகிறார். அதன் பின்னர் திருவள்ளுவர் சிலைக்குச் சென்று அஞ்சலி செலுத்தி சுற்றிப் பார்க்கவுள்ளார்.
3 நாள் ஆன்மீக பயணமாக பிரதமர் மோடி கன்னியாகுமரியில் தியானம் செய்து வருகிறார். கடந்த மே 30ம் தேதி கன்னியாகுமரி வந்த பிரதமர் முதலில் பகவதி அம்மன் கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டார். இதைத் தொடர்ந்து அவர் விவேகானந்தர் பாறையில் உள்ள தியான மண்டபத்திற்குச் சென்றார். அங்கு தொடர்ந்து தியானம் செய்து வருகிறார். இடை இடையே விவேகானந்தர் மண்டபத்துக்குள்ளேயே அவர் வாக்கிங்கும் போய்க் கொள்கிறார்.

மண்டப வளாகத்திலிருந்தே திருவள்ளுவர் சிலையையும் அவர் தினசரி கண்டு களித்தார். இந்த நிலையில், இன்று தியானம் முடிந்து விவேகானந்தர் பாறை மண்டபத்திலிருந்து பிற்பகல் 2.30 மணிக்கு அவர் வெளியே வருகிறார். தனி படகு மூலம் அவர் திருவள்ளுவர் சிலைக்குச் செல்கிறார். அங்கு சிலையைச் சுற்றிப் பார்க்கிறார். அஞ்சலி செலுத்துகிறார். அதை முடித்துக் கொண்ட பின்னர் மீண்டும் விவேகானந்தர் பாறைக்குத் திரும்பும் பி ரதமர் மோடி, தனிப் படகு மூலம் விருந்தினர் மாளிகைக்குச் செல்கிறார்.
அங்கிருந்து அவர் ஹெலிகாப்டர் தளத்துக்குச் சென்று ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டுச் சென்று அங்கிருந்து விமானம் மூலமாக டெல்லி செல்கிறார். பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் இன்று தேர்தல் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை:

பிரதமர் திருவள்ளுவர் சிலைக்குச் செல்லவுள்ளதால் விவேகானந்தர் நினைவு மண்டபம் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல படகு குழாமிலும் படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் படகு பயணம் செய்ய முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளனர். வெளியூர்களிலிருந்து வந்தவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடி, விவேகானந்தர் பாறையிலிருந்து கிளம்பிச் சென்ற பிறகே சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}