விவேகானந்தர் பாறையிலிருந்து .. தனிப் படகில்.. திருவள்ளுவர் சிலைக்கு செல்கிறார் பிரதமர் மோடி!

Jun 01, 2024,12:52 PM IST

கன்னியாகுமரி: விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தங்கி தியானம் செய்து வரும் பிரதமர் மோடி இன்று பிற்பகல் 2. 30 மணியளவில் அங்கிருந்து வெளியேறுகிறார். அதன் பின்னர் திருவள்ளுவர் சிலைக்குச் சென்று அஞ்சலி செலுத்தி சுற்றிப் பார்க்கவுள்ளார்.


3 நாள் ஆன்மீக பயணமாக பிரதமர் மோடி கன்னியாகுமரியில் தியானம் செய்து வருகிறார். கடந்த மே 30ம் தேதி கன்னியாகுமரி வந்த பிரதமர் முதலில் பகவதி அம்மன் கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டார். இதைத் தொடர்ந்து அவர் விவேகானந்தர் பாறையில் உள்ள தியான மண்டபத்திற்குச் சென்றார். அங்கு தொடர்ந்து தியானம் செய்து வருகிறார். இடை இடையே விவேகானந்தர் மண்டபத்துக்குள்ளேயே அவர் வாக்கிங்கும் போய்க் கொள்கிறார். 




மண்டப வளாகத்திலிருந்தே திருவள்ளுவர் சிலையையும் அவர் தினசரி கண்டு களித்தார். இந்த நிலையில், இன்று தியானம் முடிந்து  விவேகானந்தர் பாறை மண்டபத்திலிருந்து பிற்பகல் 2.30 மணிக்கு  அவர் வெளியே வருகிறார். தனி படகு மூலம் அவர் திருவள்ளுவர் சிலைக்குச் செல்கிறார். அங்கு சிலையைச் சுற்றிப் பார்க்கிறார். அஞ்சலி செலுத்துகிறார். அதை முடித்துக் கொண்ட பின்னர் மீண்டும் விவேகானந்தர் பாறைக்குத் திரும்பும் பி ரதமர் மோடி, தனிப் படகு மூலம் விருந்தினர் மாளிகைக்குச் செல்கிறார்.


அங்கிருந்து அவர் ஹெலிகாப்டர் தளத்துக்குச் சென்று ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டுச் சென்று அங்கிருந்து விமானம் மூலமாக டெல்லி செல்கிறார். பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் இன்று தேர்தல் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை:




பிரதமர் திருவள்ளுவர் சிலைக்குச் செல்லவுள்ளதால் விவேகானந்தர் நினைவு மண்டபம் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல படகு குழாமிலும் படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் படகு பயணம் செய்ய முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளனர். வெளியூர்களிலிருந்து வந்தவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


பிரதமர் மோடி, விவேகானந்தர் பாறையிலிருந்து கிளம்பிச் சென்ற பிறகே சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்