கன்னியாகுமரி: விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தங்கி தியானம் செய்து வரும் பிரதமர் மோடி இன்று பிற்பகல் 2. 30 மணியளவில் அங்கிருந்து வெளியேறுகிறார். அதன் பின்னர் திருவள்ளுவர் சிலைக்குச் சென்று அஞ்சலி செலுத்தி சுற்றிப் பார்க்கவுள்ளார்.
3 நாள் ஆன்மீக பயணமாக பிரதமர் மோடி கன்னியாகுமரியில் தியானம் செய்து வருகிறார். கடந்த மே 30ம் தேதி கன்னியாகுமரி வந்த பிரதமர் முதலில் பகவதி அம்மன் கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டார். இதைத் தொடர்ந்து அவர் விவேகானந்தர் பாறையில் உள்ள தியான மண்டபத்திற்குச் சென்றார். அங்கு தொடர்ந்து தியானம் செய்து வருகிறார். இடை இடையே விவேகானந்தர் மண்டபத்துக்குள்ளேயே அவர் வாக்கிங்கும் போய்க் கொள்கிறார்.
மண்டப வளாகத்திலிருந்தே திருவள்ளுவர் சிலையையும் அவர் தினசரி கண்டு களித்தார். இந்த நிலையில், இன்று தியானம் முடிந்து விவேகானந்தர் பாறை மண்டபத்திலிருந்து பிற்பகல் 2.30 மணிக்கு அவர் வெளியே வருகிறார். தனி படகு மூலம் அவர் திருவள்ளுவர் சிலைக்குச் செல்கிறார். அங்கு சிலையைச் சுற்றிப் பார்க்கிறார். அஞ்சலி செலுத்துகிறார். அதை முடித்துக் கொண்ட பின்னர் மீண்டும் விவேகானந்தர் பாறைக்குத் திரும்பும் பி ரதமர் மோடி, தனிப் படகு மூலம் விருந்தினர் மாளிகைக்குச் செல்கிறார்.
அங்கிருந்து அவர் ஹெலிகாப்டர் தளத்துக்குச் சென்று ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டுச் சென்று அங்கிருந்து விமானம் மூலமாக டெல்லி செல்கிறார். பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் இன்று தேர்தல் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை:
பிரதமர் திருவள்ளுவர் சிலைக்குச் செல்லவுள்ளதால் விவேகானந்தர் நினைவு மண்டபம் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல படகு குழாமிலும் படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் படகு பயணம் செய்ய முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளனர். வெளியூர்களிலிருந்து வந்தவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடி, விவேகானந்தர் பாறையிலிருந்து கிளம்பிச் சென்ற பிறகே சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}