புது டெல்லி: நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சிகள் ஆரோக்கியமான விவாதத்தில் ஈடுபட வேண்டும். கூட்டத்திற்கு இடையூறு செய்யக் கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் விவாதங்கள் தீவிரமாக இருக்கலாம். ஆனால் இடையூறு செய்வதாக இருக்கக் கூடாது என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

2024- 25 நிதி ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தனது உரையுடன் தொடங்கி வைத்தார். முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
நாடாளுமன்ற விவாதங்கள் ஆக்கபூர்வமாக இருக்க வேண்டும். விவாதங்கள் தீவிரமாக இருக்கலாம். இடையூறு செய்வதாக இருக்கக் கூடாது. நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் செயல்பாடுகள் அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஜனநாயகத்தை சிறுமைபடுத்த கூடாது.
நாட்டில் பெண் சக்தியின் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் நாடு வளர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கிறது. பெண் குடியரசுத் தலைவர் புதிய நாடாளுமன்றத்தில் முதல் பட்ஜெட் கூட்டத் தொடரை தொடங்கி வைத்துள்ளார். நாளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செயயவுள்ளார் என்று கூறினார் பிரதமர் மோடி.
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}