புது டெல்லி: நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சிகள் ஆரோக்கியமான விவாதத்தில் ஈடுபட வேண்டும். கூட்டத்திற்கு இடையூறு செய்யக் கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் விவாதங்கள் தீவிரமாக இருக்கலாம். ஆனால் இடையூறு செய்வதாக இருக்கக் கூடாது என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

2024- 25 நிதி ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தனது உரையுடன் தொடங்கி வைத்தார். முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
நாடாளுமன்ற விவாதங்கள் ஆக்கபூர்வமாக இருக்க வேண்டும். விவாதங்கள் தீவிரமாக இருக்கலாம். இடையூறு செய்வதாக இருக்கக் கூடாது. நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் செயல்பாடுகள் அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஜனநாயகத்தை சிறுமைபடுத்த கூடாது.
நாட்டில் பெண் சக்தியின் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் நாடு வளர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கிறது. பெண் குடியரசுத் தலைவர் புதிய நாடாளுமன்றத்தில் முதல் பட்ஜெட் கூட்டத் தொடரை தொடங்கி வைத்துள்ளார். நாளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செயயவுள்ளார் என்று கூறினார் பிரதமர் மோடி.
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}