டில்லி : பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மன்னிக்க முடியாதது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சுய தொழில் புரிவோருக்கான விழா ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, பெண்களின் பாதுகாப்பு என்பது மிக முக்கியம். நான் மீண்டும் சொல்கிறேன் ஒவ்வொரு மாநில அரசும் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை மன்னிக்க முடியாதது. குற்றவாளி யாராக இருந்தாலும் சரி அது பற்றி கவலையில்லை. அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றார். கொல்கத்தாவில் பெண் டாக்டர்கள் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் பிரதமரின் இந்த வார்த்தை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
மேலும் அவர் கூறுகையில், பெண்களுக்கான குற்றங்கள் செய்வோருக்கு மிக கடுமையான தண்டனை வழங்கப்படும் வகையில் சட்டங்களை கடுமையாக்கி, பலப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளார்.
சுயதொழில் புரிவோர் குறித்து பேசி பிரதமர், சுயதொழில் புரியும் உறுப்பினர்களின் குடும்பங்களின் ஆண்டு வருமாவம் ரூ.1 லட்சம் மற்றும் அதற்கு அதிகமாக அதிகரித்துள்ளது. இந்த வருமானம் அவர்களின் நான்கு போக விவசாயத்திற்கு ஆகும் செலவையும், தொழில்களுக்கு முதலீடு செய்யவும் உதவும். அவர்களின் மாத வருமானமும் ரூ.10,000 வரை அதிகரித்துள்ளது என்றார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}