பெண்களுக்கு எதிரான குற்றத்திற்கு கடும் நடவடிக்கை... பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை

Aug 26, 2024,10:17 AM IST

டில்லி :   பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மன்னிக்க முடியாதது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.




சுய தொழில் புரிவோருக்கான விழா ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, பெண்களின் பாதுகாப்பு என்பது மிக முக்கியம். நான் மீண்டும் சொல்கிறேன் ஒவ்வொரு மாநில அரசும் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை மன்னிக்க முடியாதது. குற்றவாளி யாராக இருந்தாலும் சரி அது பற்றி கவலையில்லை. அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றார். கொல்கத்தாவில் பெண் டாக்டர்கள் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் பிரதமரின் இந்த வார்த்தை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.


மேலும் அவர் கூறுகையில், பெண்களுக்கான குற்றங்கள் செய்வோருக்கு மிக கடுமையான தண்டனை வழங்கப்படும் வகையில் சட்டங்களை கடுமையாக்கி, பலப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளார். 


சுயதொழில் புரிவோர் குறித்து பேசி பிரதமர், சுயதொழில் புரியும் உறுப்பினர்களின் குடும்பங்களின் ஆண்டு வருமாவம் ரூ.1 லட்சம் மற்றும் அதற்கு அதிகமாக அதிகரித்துள்ளது. இந்த வருமானம் அவர்களின் நான்கு போக விவசாயத்திற்கு ஆகும் செலவையும், தொழில்களுக்கு முதலீடு செய்யவும் உதவும். அவர்களின் மாத வருமானமும் ரூ.10,000 வரை அதிகரித்துள்ளது என்றார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்