டெல்லி: மகளிர் தினத்தையொட்டி வீட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலையை ரூ. 100 குறைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு சிலிண்டரின் விலை உச்சத்தில் உள்ளது. இதைக் குறைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுவதைத் தொடர்ந்து விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில், இன்று மகளிர் தினம். வீட்டுஎரிவாயு சிலிண்டர் விலையை ரூ. 100 குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது கோடிக்கணக்கான குடும்பங்களின் நிதிச்சுமையைக் குறைக்க உதவும். குறிப்பாக பெண்களுக்கு இது பலன் தரும்.
வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு சிலிண்டர்களின் விலையைக் குறைப்பதன் மூலம் குடும்பங்களின் நலனைப் பாதுகாக்கும் முயற்சியில் நாங்களும் தோள் கொடுக்கிறோம். மேலும் சுகாதாரமான சூழலை உறுதிப்படுத்தவும் இது உதவும். பெண்களை சக்தி படைத்தவர்களாக மாற்ற வேண்டும், அவர்களது வாழ்க்கை எளிதாக வேண்டும் என்ற எங்களது உறுதியில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம் என்பதை இது வெளிப்படுத்துகிறது என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}