டெல்லி: மகளிர் தினத்தையொட்டி வீட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலையை ரூ. 100 குறைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு சிலிண்டரின் விலை உச்சத்தில் உள்ளது. இதைக் குறைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுவதைத் தொடர்ந்து விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில், இன்று மகளிர் தினம். வீட்டுஎரிவாயு சிலிண்டர் விலையை ரூ. 100 குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது கோடிக்கணக்கான குடும்பங்களின் நிதிச்சுமையைக் குறைக்க உதவும். குறிப்பாக பெண்களுக்கு இது பலன் தரும்.
வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு சிலிண்டர்களின் விலையைக் குறைப்பதன் மூலம் குடும்பங்களின் நலனைப் பாதுகாக்கும் முயற்சியில் நாங்களும் தோள் கொடுக்கிறோம். மேலும் சுகாதாரமான சூழலை உறுதிப்படுத்தவும் இது உதவும். பெண்களை சக்தி படைத்தவர்களாக மாற்ற வேண்டும், அவர்களது வாழ்க்கை எளிதாக வேண்டும் என்ற எங்களது உறுதியில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம் என்பதை இது வெளிப்படுத்துகிறது என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.
துபாய் விமான நிலையம் அருகே ஈரான் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் உட்பட 4 பேர் காயம்
தேமுதிக.,விற்கு விருத்தாச்சலம் தொகுதி ஒதுக்கீடு?: மீண்டும் ஒரு 'கேப்டன்' மேஜிக் நடக்குமா?
பிரதமரின் தமிழக வருகைக்கு முன்பு தொகுதிப் பங்கீட்டை முடிக்க அதிமுக தீவிரம்
ஒரே நாளில் 60 வேட்பாளர்கள் தேர்வு...அதிரடி காட்டும் தவெக விஜய்
தமிழகத்தின் புதிய ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் நாளை பதவியேற்பு
நாகர்கோவில் மற்றும் போத்தனூரிலிருந்து அம்ரித் பாரத் ரயில்கள்!
திருச்சி வருகிறார் பிரதமர் மோடி.. ரூ. 5650 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்
Tamil Nadu Assembly Elections 2026: "ஹீரோ"வை எப்போது களம் இறக்கப் போகிறது திமுக?
தொடக்கம்!
{{comments.comment}}