சென்னை: பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு, விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தியானத்தைத் தொடங்கியுள்ளார். இரவு பகலாக அவர் ஜூன் 1ம் தேதி மாலை வரை இந்த தியானத்தைத் தொடரவுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, இன்று மாலை திருவனந்தபுரத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு வந்து சேர்ந்தார். அவர் அங்குள்ள விவேகானந்தர் நினைவு தியான மண்டபத்தில் 2 நாட்கள் தியானம் செய்வதற்காக வந்துள்ளார். இதற்காக அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பல்வேறு தடைகளை காவல்துறை விதித்துள்ளது. மீனவர்கள் மீன் பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி வந்துள்ள பிரதமர் மோடி முதலில் பகவதி அம்மன் கோவிலுக்குச் சென்று வழிபட்டார். அதன் பின்னர் அவர் விவேகானந்தர் தியான மண்டபம் சென்றார். மண்டபத்திற்கு சென்ற அவர் அங்கிருந்தபடி மண்டபத்தை சுற்றிப் பார்த்தார். பின்னர் மண்டபத்திற்குள் அவர் சென்றார். அங்கு அவருக்கு நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து பிரதமரின் தியானம் தற்போது தொடங்கியுள்ளது. ஜூன் 1ம் தேதி மாலை வரை தனது தியானத்தை இரவு பகலாக தொடரவுள்ளார் பிரதமர் மோடி.
திருமயத்திற்கு வந்த அமைச்சர் அமித்ஷா
மறுபக்கம், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இன்று தமிழ்நாட்டுக்கு வந்துள்ளார். பல்வேறு கோவில்களுக்கு அவர் விஜயம் செய்தார். பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் பூஜை செய்து விட்டு விமானம் மூலம் அவர் திருச்சிக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சென்றார். அங்குள்ள கோட்டை பைரவர் கோவிலில் பக்தியுடன் வழிபட்டார்.
அமைச்சர் அமித் ஷாவுடன், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, எச். ராஜா உள்ளிட்டோரும் உடன் இருந்தனர். அடுத்து நாளை காலை திருப்பதி சென்று ஏழுமலையான் கோவிலில் அவர் வழிபடவுள்ளார்.
அடுத்தடுத்து இரு பெரும் பாஜக தலைவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்திருப்பதால் பரபரப்பும், சலசலப்பும் ஏற்பட்டுள்ளது. பிரதமர் தியான திட்டமானது வரவேற்பையும், எதிர்ப்பையும் பெற்றுள்ளது. பாஜக கூட்டணித் தலைவர்கள் இதை வரவேற்றுள்ளனர். காங்கிரஸ் கடுமையாக எதிர்த்துள்ளது. மதுரையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் பிரதமர் மோடி வருகையை எதிர்த்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பிரித்து மேய்ந்த பிரேவிஸ்.. சொதப்பிய கேப்டன் தோனி.. பெரிய ஸ்கோரை எட்டுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}