சென்னை: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு இன்று பிறந்த நாள். இதையட்டி அவருக்கு, பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் 77வது பிறந்த நாள் விழா இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் அவருடைய பிறந்த நாளை இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவீட்டில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், அர்ப்பணிப்புள்ள பொது வாழ்க்கையின் உதாரணமாக விளங்கும் காங்கிரஸ்சின் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன். சதிகார சக்திகளிடமிருந்து இந்தியாவைக் காப்பாற்றும் முயற்சியில், அவரது அனுபவம் தொடர்ந்து வழிகாட்டும் வெளிச்சமாக இருக்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகர்ஜூன கார்கே வெளியிட்ட வாழ்த்தில், காங்கிரஸ் நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்காக தைரியம், துணிச்சல் மற்றும் தன்னலம் மற்ற தியாகத்துடன் போராடிய அவர் கருணையின் அடையாளமாக இருந்துள்ளார். நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
{{comments.comment}}