சூரத்: குஜராத் மாநிலம் சூரத்தில் கட்டப்பட்டுள்ள மிகப் பிரமாண்டமான வைர சந்தை அலுவலக வளாகத்தை (Surat Diamond Exchange) பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
இதுதான் உலகத்திலேயே மிகப் பெரிய அலுவலக வளாகம் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் மிகப் பெரிய அலுவலக வளாகம் என்ற பெருமையுடன் இருந்து வந்தது அமெரிக்காவின் பென்டகன் அலுவலக வளாகம்தான். அமெரிக்க ராணுவத் தலையமைகம்தான் பென்டகன். இது 1943ம் ஆண்டு திறக்கப்பட்டது. கிட்டத்தட்ட 60.5 லட்சம் சதுர அடி பரப்பளவில் இது அமைந்துள்ளது.

தற்போது இந்த அலுவலக வளாகத்தை இந்தியா முந்தி புதிய சாதனை படைத்துள்ளது. சூரத்தில் கட்டப்பட்டுள்ள Surat Diamond Exchange அலுவலக வளாகம் 67 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 32 பில்லியன் ரூபாய் செலவில் இந்த பிரமாண்ட அலுவலக வளாகம் கட்டப்பட்டுள்ளது.
இந்த பிரமாண்ட அலுவலக வளாகத்தில் மிகப் பெரிய நகை மால் ஒன்று இடம் பெற்றுள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான நகைக் கடைகள் இடம் பெறுகின்றன. இதுதவிர சர்வதேச வங்கிகளின் கிளைகளுக்கும் இங்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்புடன் கூடிய பாதுகாப்பு பெட்டகங்களும் இங்கு அமைக்கப்படுகின்றன.
இந்தியாவின் வைர ஏற்றுமதியின் மையமாக நீண்ட காலமாகவே மும்பைதான் இருந்து வந்தது. அதேசமயம், இந்தியாவின் வைர நகரமாக சூரத்தான் திகழ்கிறது. உலகின் வைரங்களில் கிட்டத்தட்ட 90 சதவீத வைரங்கள் சூரத்தில்தான் வெட்டி எடுக்கப்பட்டு பாலிஷ் செய்ய்படுகின்றன. அவைதான் அமெரிக்கா, சீனா சந்தைகளை பெருமமளவில் ஆக்கிரமித்துள்ளன.
இந்த நிலையில் சூரத்திலேயே மொத்த வைர வணிகத்தையும் ஒருங்கிணைக்கும் வகையில் இந்த பிரமாண்ட வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. சூரத்தில் உள்ள வைர ஆய்வு மற்றும் விற்பனை நகரிலேயே இந்த பிரமாண்ட அலுவலக வளாகம் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 15 மாடிகளைக் கொண்ட கட்டடங்கள் இங்கு இடம் பெற்றுள்ளன. 4700 அலுவலகங்களை இங்கு அமைக்க முடியும். இதில் 130 அலுவலகங்கள் தற்போது பயன்பாட்டுக்கு வந்து விட்டன.
LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!
சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு
என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி
சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு
விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு
{{comments.comment}}