Surat Diamond Exchange.. உலகத்திலேயே இதுதான் பெருசு.. திறந்து வைத்தார் பிரதமர் மோடி

Dec 17, 2023,12:42 PM IST

சூரத்: குஜராத் மாநிலம் சூரத்தில் கட்டப்பட்டுள்ள மிகப் பிரமாண்டமான வைர சந்தை அலுவலக வளாகத்தை (Surat Diamond Exchange) பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.


இதுதான் உலகத்திலேயே மிகப் பெரிய அலுவலக வளாகம் என்பது குறிப்பிடத்தக்கது. 


உலக அளவில் மிகப் பெரிய அலுவலக வளாகம் என்ற பெருமையுடன் இருந்து வந்தது அமெரிக்காவின் பென்டகன் அலுவலக வளாகம்தான். அமெரிக்க ராணுவத் தலையமைகம்தான் பென்டகன். இது 1943ம் ஆண்டு திறக்கப்பட்டது. கிட்டத்தட்ட 60.5 லட்சம் சதுர அடி பரப்பளவில் இது அமைந்துள்ளது.




தற்போது இந்த அலுவலக வளாகத்தை இந்தியா முந்தி புதிய சாதனை படைத்துள்ளது. சூரத்தில் கட்டப்பட்டுள்ள Surat Diamond Exchange அலுவலக வளாகம் 67 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.  கிட்டத்தட்ட 32 பில்லியன் ரூபாய் செலவில் இந்த பிரமாண்ட அலுவலக வளாகம் கட்டப்பட்டுள்ளது.


இந்த பிரமாண்ட அலுவலக வளாகத்தில் மிகப் பெரிய நகை மால் ஒன்று இடம் பெற்றுள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான நகைக் கடைகள் இடம் பெறுகின்றன. இதுதவிர சர்வதேச வங்கிகளின் கிளைகளுக்கும் இங்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்புடன் கூடிய பாதுகாப்பு பெட்டகங்களும் இங்கு அமைக்கப்படுகின்றன.


இந்தியாவின் வைர ஏற்றுமதியின் மையமாக நீண்ட காலமாகவே மும்பைதான் இருந்து வந்தது. அதேசமயம், இந்தியாவின் வைர நகரமாக சூரத்தான் திகழ்கிறது. உலகின் வைரங்களில் கிட்டத்தட்ட 90 சதவீத வைரங்கள் சூரத்தில்தான் வெட்டி எடுக்கப்பட்டு பாலிஷ் செய்ய்படுகின்றன. அவைதான் அமெரிக்கா, சீனா சந்தைகளை பெருமமளவில் ஆக்கிரமித்துள்ளன.


இந்த நிலையில் சூரத்திலேயே மொத்த வைர வணிகத்தையும் ஒருங்கிணைக்கும் வகையில் இந்த பிரமாண்ட வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. சூரத்தில் உள்ள வைர ஆய்வு மற்றும் விற்பனை நகரிலேயே இந்த பிரமாண்ட அலுவலக வளாகம் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 15 மாடிகளைக் கொண்ட கட்டடங்கள் இங்கு இடம் பெற்றுள்ளன. 4700 அலுவலகங்களை இங்கு அமைக்க முடியும். இதில் 130 அலுவலகங்கள் தற்போது பயன்பாட்டுக்கு வந்து விட்டன.

சமீபத்திய செய்திகள்

news

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

news

உழைப்பின் உயர்வு (கவிதை)

news

திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

news

எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட சிறுமியை சீரழித்த கொடூரன்.. காப்பக உரிமையாளர் உள்பட 4 பேர் கைது

news

கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

முதல்வரின் கோரிக்கை மனு...தமிழகம் வரும் பிரதமரிடம் வழங்க போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா

news

Dude.. பிரதீப் ரங்கநாதன் படத்தில் கேமியோ ரோல்.. யார் பண்றாங்கன்னு தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்