டெல்லி: முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். உடல்நிலையை காரணம் காட்டி அவர் ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன. இந்த நிலையில் பிரதமர் மோடி, தன்கர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தன்கரின் ராஜினாமா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய சில மணி நேரங்களில் அவர் ராஜினாமா செய்துள்ளார். இது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. தன்கர் திங்கட்கிழமை இரவு தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா தற்போது ஏற்கப்பட்டு விட்டது.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் தன்கர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஸ்ரீ ஜகதீப் தன்கர் ஜி, இந்திய துணை ஜனாதிபதி உட்பட பல பதவிகளில் நாட்டுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தது. அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய வரலாற்றில் பதவியில் இருக்கும்போது ராஜினாமா செய்த மூன்றாவது துணை ஜனாதிபதி தன்கர் ஆவார். இதற்கு முன்பு வி.வி.கிரி மற்றும் ஆர்.வெங்கட்ராமன் ஆகியோர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக ராஜினாமா செய்தனர். ஆனால், தன்கருக்கு அப்படி எந்த திட்டமும் இல்லை.
தனது ராஜினாமா கடிதத்தில், ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களுக்கு தன்கர் நன்றி தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைத் தொடர்கிறேன்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஜெகதீப் தன்கர் விரைவில் குணமடைய வேண்டும்.. பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
குடியரசு துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கரின் ராஜினாமா ஏற்பு
தக்காளி விலை மீண்டும் உயர்வு.. சென்னையில் ஒரு கிலோ ரூ.60.. அப்படீன்னா சட்னிக்கு ஆப்பா!
அதிமுக கூட்டணிக்கு வாங்க.. சீமான், விஜய்யை மீண்டும் அழைத்த எடப்பாடி பழனிச்சாமி.. போவாங்களா!
ஜெகதீப் தன்கர் திடீர் ராஜினாமா ஏன்.. என்னவோ நடந்திருக்கிறது.. சந்தேகம் கிளப்பும் காங்கிரஸ்
டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் தீ.. பத்திரமாக தரையிறங்கியது.. பயணிகளுக்கு ஆபத்தில்லை
ரவி சாஸ்திரியின்.. சிறந்த இந்திய வீரர்கள் லிஸ்ட்டில்.. யாரெல்லாம் இருக்காங்க பாருங்க!
வெண்ணெய் .. அது ஏன் மஞ்சள் நிறத்தில் இருக்குன்னு தெரியுமா?.. தெரிஞ்சுக்கங்க பாஸு!
{{comments.comment}}