டெல்லி: முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். உடல்நிலையை காரணம் காட்டி அவர் ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன. இந்த நிலையில் பிரதமர் மோடி, தன்கர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தன்கரின் ராஜினாமா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய சில மணி நேரங்களில் அவர் ராஜினாமா செய்துள்ளார். இது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. தன்கர் திங்கட்கிழமை இரவு தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா தற்போது ஏற்கப்பட்டு விட்டது.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் தன்கர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஸ்ரீ ஜகதீப் தன்கர் ஜி, இந்திய துணை ஜனாதிபதி உட்பட பல பதவிகளில் நாட்டுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தது. அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய வரலாற்றில் பதவியில் இருக்கும்போது ராஜினாமா செய்த மூன்றாவது துணை ஜனாதிபதி தன்கர் ஆவார். இதற்கு முன்பு வி.வி.கிரி மற்றும் ஆர்.வெங்கட்ராமன் ஆகியோர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக ராஜினாமா செய்தனர். ஆனால், தன்கருக்கு அப்படி எந்த திட்டமும் இல்லை.
தனது ராஜினாமா கடிதத்தில், ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களுக்கு தன்கர் நன்றி தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
Good touch & bad touch மட்டுமல்ல.. பெண் பிள்ளைகளுக்கு வீரக் கலைகளும் அவசியம்!
கல்வி அவளின் அடையாளம்.. தன்னம்பிக்கை அவளின் ஆயுதம்!
நீ தொழிலுக்காக அரசியல் பண்றவன்.. நான் அரசியலையே தொழிலா பண்றவன்...கராத்தே பாபு பட டீசர் வெளியீடு!
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
வீட்டின் வாசலில் நின்றாலும்.. வானம் வரை நீளும் கனவுகள்!
{{comments.comment}}