டெல்லி: மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குக் கிடைத்த வெற்றி, வளர்ச்சிக்கும், நல்லாட்சிக்கும் கிடைத்த வெற்றி என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
2 மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள எ்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:
வளர்ச்சி வென்றுள்ளது.. நல்லாட்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.. இணைந்திருந்தால் வானத்தையும் தாண்டி வெல்லலாம் என்பதை உணர்த்தியுள்ள முடிவு இது.

மகாராஷ்டிர மாநில சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக இளைஞர்களுக்கும், பெண்களுக்கும், இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை அளித்ததற்காக நன்றி கூறிக் கொள்கிறேன். அவர்கள் எங்கள் மீது காட்டியுள்ள அன்பும், பாசமும் ஒப்பிட முடியாதது.
மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக எங்களது கூட்டணி தொடர்ந்து பாடுபடும் என்ற உறுதிமொழியை இப்போது அளிக்கிறேன். ஜெய் மகாராஷ்டிரா என்று கூறியுள்ளார்.
ஜார்க்கண்ட் மக்களுக்கு நன்றி
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு தொடர்பாக அவர் போட்டுள்ள பதிவில், ஜார்க்கண்ட் மாநில மக்கள் எங்களுக்கு தெரிவித்த ஆதரவுக்கு அவர்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். மக்கள் பிரச்சினைகளை உரிய இடத்தில் எழுப்பவும், மாநிலத்தின் நலனுக்காக உழைப்பதிலும் பாஜக முதலிடத்தில் இருக்கும். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணியின் சிறந்த தேர்தல் செயல்பாட்டுக்காக முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் பிரதமர்.
நாடு முழுவதும் நடந்த தேர்தலுக்காக தீவிரமாக களப் பணியாற்றிய பாஜகவினருக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினருக்கும் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
3 இடங்களில் குங்குமம் வைக்க வேண்டும்.. பெண்களே இதைத் தெரிஞ்சுக்கோங்க!
பார்த்துப் பதறாமல் நகர்ந்து போகும் காற்றழுத்தம்.. அதான் மழை இன்னும் நிக்கலையாம்!
தமிழக வாக்காளர்கள் பட்டியலில் இறந்து போன 24 லட்சம் பேரின் பெயர்கள்
டைரக்டர் ஆகிறாரா கீர்த்தி சுரேஷ்? அவரே சொன்ன செம தகவல்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் .. மாலையில் மகா தீபம்.. பக்தர்கள் குவிந்தனர்
அஜித் ஸ்டைலில் ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் வைத்த வேண்டுகோள்
டெல்லியில் 2 லட்சம் பேர் சுவாச நோயால் பாதிப்பு...பகீர் கிளப்பும் தகவல்
கோகுலம் காத்த கோபாலனே.. காலத்தைக் காத்த காகுத்தனே?
தவெக ரோட்ஷோவுக்கு அனுமதி இல்லை.. கூட்டம் நடத்தவும் குறுகிய காலம்.. புதுச்சேரி திட்டம் கேன்சல்!
{{comments.comment}}