டெல்லி: மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குக் கிடைத்த வெற்றி, வளர்ச்சிக்கும், நல்லாட்சிக்கும் கிடைத்த வெற்றி என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
2 மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள எ்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:
வளர்ச்சி வென்றுள்ளது.. நல்லாட்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.. இணைந்திருந்தால் வானத்தையும் தாண்டி வெல்லலாம் என்பதை உணர்த்தியுள்ள முடிவு இது.
மகாராஷ்டிர மாநில சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக இளைஞர்களுக்கும், பெண்களுக்கும், இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை அளித்ததற்காக நன்றி கூறிக் கொள்கிறேன். அவர்கள் எங்கள் மீது காட்டியுள்ள அன்பும், பாசமும் ஒப்பிட முடியாதது.
மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக எங்களது கூட்டணி தொடர்ந்து பாடுபடும் என்ற உறுதிமொழியை இப்போது அளிக்கிறேன். ஜெய் மகாராஷ்டிரா என்று கூறியுள்ளார்.
ஜார்க்கண்ட் மக்களுக்கு நன்றி
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு தொடர்பாக அவர் போட்டுள்ள பதிவில், ஜார்க்கண்ட் மாநில மக்கள் எங்களுக்கு தெரிவித்த ஆதரவுக்கு அவர்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். மக்கள் பிரச்சினைகளை உரிய இடத்தில் எழுப்பவும், மாநிலத்தின் நலனுக்காக உழைப்பதிலும் பாஜக முதலிடத்தில் இருக்கும். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணியின் சிறந்த தேர்தல் செயல்பாட்டுக்காக முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் பிரதமர்.
நாடு முழுவதும் நடந்த தேர்தலுக்காக தீவிரமாக களப் பணியாற்றிய பாஜகவினருக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினருக்கும் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Robo Shankar: உன் வேலை நீ போனாய்.. என் வேலை தங்கி விட்டேன்.. கமல்ஹாசன் இரங்கல்
Robo Shankar paases away: நடிகர் ரோபோ சங்கர் காலமானார்...திரையுலகினர் அதிர்ச்சி!
சென்னையில் மாலையில் கலக்கிய மழை...அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அலர்ட்!
விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்ட வழக்கு: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
ரெஸ்ட் ரூம் போனால் கூட இனி சொல்லிட்டுத்தான் போகணும் போல.. எடப்பாடி பழனிச்சாமி கோபம்
சாராயம் விற்ற பணத்தில் தான் திமுகவின் முப்பெரும் விழா நடந்துள்ளது: அண்ணாமலை
டெல்லி சந்திப்பின்போது.. எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவிடம் சொன்ன.. "அந்த" 2 விஷயங்கள்!
பீகாரில் மட்டுமல்ல கர்நாடகாவிலும் ஓட்டு திருட்டு : ராகுல் காந்தி போட்ட ஹைட்ரஜன் குண்டு
பீகார் சட்டசபைத் தேர்தல்.. கலர் போட்டோ, கொட்டை எழுத்துகளில் புதிய EVM.. கலகலக்கும் களம்!
{{comments.comment}}