வளர்ச்சிக்கும், நல்லாட்சிக்கும் கிடைத்த பெரும் வெற்றி .. மகாராஷ்டிரா மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி

Nov 23, 2024,05:38 PM IST

டெல்லி: மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குக் கிடைத்த வெற்றி,  வளர்ச்சிக்கும், நல்லாட்சிக்கும் கிடைத்த வெற்றி என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


2 மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள எ்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:


வளர்ச்சி வென்றுள்ளது.. நல்லாட்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.. இணைந்திருந்தால் வானத்தையும் தாண்டி வெல்லலாம் என்பதை உணர்த்தியுள்ள முடிவு இது.




மகாராஷ்டிர மாநில சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக இளைஞர்களுக்கும், பெண்களுக்கும், இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை அளித்ததற்காக நன்றி கூறிக் கொள்கிறேன். அவர்கள் எங்கள் மீது காட்டியுள்ள அன்பும், பாசமும் ஒப்பிட முடியாதது.


மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக எங்களது கூட்டணி தொடர்ந்து பாடுபடும் என்ற உறுதிமொழியை இப்போது அளிக்கிறேன். ஜெய் மகாராஷ்டிரா என்று கூறியுள்ளார்.


ஜார்க்கண்ட் மக்களுக்கு நன்றி


ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு தொடர்பாக அவர் போட்டுள்ள பதிவில், ஜார்க்கண்ட் மாநில மக்கள் எங்களுக்கு தெரிவித்த ஆதரவுக்கு அவர்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். மக்கள் பிரச்சினைகளை உரிய இடத்தில் எழுப்பவும், மாநிலத்தின் நலனுக்காக உழைப்பதிலும் பாஜக முதலிடத்தில் இருக்கும். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணியின் சிறந்த தேர்தல் செயல்பாட்டுக்காக முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் பிரதமர்.


நாடு முழுவதும் நடந்த தேர்தலுக்காக தீவிரமாக களப் பணியாற்றிய பாஜகவினருக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினருக்கும் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.




செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

2026 தேர்தலுக்கு.. தவெக கேட்கப் போகும் சின்னம் என்னாவா இருக்கும்.. எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!

news

Roston Chase.. வெஸ்ட் இண்டீஸ் Test அணிக்கு புதிய கேப்டன்.. 2 வருட கேப்புக்குப் பிறகு விளையாடுகிறார்!

news

ஆபரேஷன் சிந்தூர் அதிரடி எதிரொலி.. பாதுகாப்புத்துறை பட்ஜெட் ரூ.50,000 கோடி அதிகரிக்க வாய்ப்பு

news

ஜூலை 4 முதல் 10ம் தேதி வரை துணைத்தேர்வுகள் நடைபெறும்: அரசுத் தேர்வுகள் இயக்கம்

news

இது வெறும் டிரெய்லர் தான்... ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை... மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!

news

Maman movie: ஏண்டா தம்பிகளா, மண் சோறு சாப்பிட்டா எப்படிடா படம் ஓடும்.. நடிகர் சூரி ஆதங்கம்!

news

நிதி ஆயோக் கூட்டம்: மே 24 முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்லவுள்ளதாக தகவல்!

news

ஆடு மாடுகளோடு நிம்மதியாக விவசாயம் பார்க்கிறேன்.. இப்படியே இருக்கப் போறேன்.. அண்ணாமலை

news

தமிழகத்தில்.. பள்ளிகள் திறப்பு எப்போது..? தேதி அறிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்