திருவனந்தபுரம் டூ தாம்பரம்.. அம்ரித் பாரத் ரயில்.. தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

Jan 23, 2026,03:41 PM IST

சென்னை:  கேரள மாநிலத் தலைநகர் திருவனநந்தபுரத்திலிருந்து தமிழ்நாட்டின் தாம்பரம் ரயில் நிலையம் வரை இயக்கப்படும் அம்ரித் பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று திருவனந்தபுரத்தில் தொடங்கி வைக்கிறார்.


16121 / 16122 என்ற எண்கள் கொண்ட இந்த அம்ரித் பாரத் ரயிலானது, வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலாகும். வந்தே பாரத் ரயில்களைப் போல நவீன வசதிகள் கொண்டவை, ஆனால் இதில் ஏசி வசதி கிடையாது. முழுக்க முழுக்க குளிர்சாதன வசதி இல்லாத ரயிலாகும். இது சாதாரண மக்களுக்கான அதிவேக ரயிலாக வடிவமைக்கப்பட்டுள்ளது.


மொத்தம் 22 பெட்டிகள் இதில் இடம் பெற்றிருக்கும். அதில், 11 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 8 பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் மற்றும் 1 சமையல் அறை பெட்டி (Pantry Car) ஆகியவை அடங்கும்.




திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு குழித்துறை, நாகர்கோவில் டவுன், வள்ளியூர், நெல்லை (மதியம் 1:20), கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு வழியாக இரவு 11:45 மணிக்கு தாம்பரத்தைச் வந்தடையும்.


இந்த ரயிலின் வழக்கமான சேவை நாட்கள் மற்றும் நேர அட்டவணையைத் தென்னக ரயில்வே விரைவில் முறைப்படி அறிவிக்க உள்ளது. ஏற்கனவே நாகர்கோவில் - நியூ ஜல்பைகுரி இடையே ஒரு அம்ரித் பாரத் ரயில் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்