சென்னை: கேரள மாநிலத் தலைநகர் திருவனநந்தபுரத்திலிருந்து தமிழ்நாட்டின் தாம்பரம் ரயில் நிலையம் வரை இயக்கப்படும் அம்ரித் பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று திருவனந்தபுரத்தில் தொடங்கி வைக்கிறார்.
16121 / 16122 என்ற எண்கள் கொண்ட இந்த அம்ரித் பாரத் ரயிலானது, வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலாகும். வந்தே பாரத் ரயில்களைப் போல நவீன வசதிகள் கொண்டவை, ஆனால் இதில் ஏசி வசதி கிடையாது. முழுக்க முழுக்க குளிர்சாதன வசதி இல்லாத ரயிலாகும். இது சாதாரண மக்களுக்கான அதிவேக ரயிலாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 22 பெட்டிகள் இதில் இடம் பெற்றிருக்கும். அதில், 11 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 8 பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் மற்றும் 1 சமையல் அறை பெட்டி (Pantry Car) ஆகியவை அடங்கும்.

திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு குழித்துறை, நாகர்கோவில் டவுன், வள்ளியூர், நெல்லை (மதியம் 1:20), கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு வழியாக இரவு 11:45 மணிக்கு தாம்பரத்தைச் வந்தடையும்.
இந்த ரயிலின் வழக்கமான சேவை நாட்கள் மற்றும் நேர அட்டவணையைத் தென்னக ரயில்வே விரைவில் முறைப்படி அறிவிக்க உள்ளது. ஏற்கனவே நாகர்கோவில் - நியூ ஜல்பைகுரி இடையே ஒரு அம்ரித் பாரத் ரயில் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
நிறைவேற்றாத திட்டத்துக்கு எப்படி நிதி தருவது: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
கருகிய மலர்.. வாடாத வாசம்.. அவள்.. Burnt flower!
கூட்டணியை விடுங்க...அதிமுக.,விற்கு இரட்டை இலை சின்னம் சிக்கல் இல்லாமல் கிடைக்குமா?
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
தைப்பூசத் திருவிழா.. சென்னிமலையில் கோலாகலம்.. நாளை கொடியேற்றம்
பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
{{comments.comment}}