சென்னை: கேரள மாநிலத் தலைநகர் திருவனநந்தபுரத்திலிருந்து தமிழ்நாட்டின் தாம்பரம் ரயில் நிலையம் வரை இயக்கப்படும் அம்ரித் பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று திருவனந்தபுரத்தில் தொடங்கி வைக்கிறார்.
16121 / 16122 என்ற எண்கள் கொண்ட இந்த அம்ரித் பாரத் ரயிலானது, வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலாகும். வந்தே பாரத் ரயில்களைப் போல நவீன வசதிகள் கொண்டவை, ஆனால் இதில் ஏசி வசதி கிடையாது. முழுக்க முழுக்க குளிர்சாதன வசதி இல்லாத ரயிலாகும். இது சாதாரண மக்களுக்கான அதிவேக ரயிலாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 22 பெட்டிகள் இதில் இடம் பெற்றிருக்கும். அதில், 11 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 8 பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் மற்றும் 1 சமையல் அறை பெட்டி (Pantry Car) ஆகியவை அடங்கும்.

திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு குழித்துறை, நாகர்கோவில் டவுன், வள்ளியூர், நெல்லை (மதியம் 1:20), கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு வழியாக இரவு 11:45 மணிக்கு தாம்பரத்தைச் வந்தடையும்.
இந்த ரயிலின் வழக்கமான சேவை நாட்கள் மற்றும் நேர அட்டவணையைத் தென்னக ரயில்வே விரைவில் முறைப்படி அறிவிக்க உள்ளது. ஏற்கனவே நாகர்கோவில் - நியூ ஜல்பைகுரி இடையே ஒரு அம்ரித் பாரத் ரயில் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}