டெல்லி: நாடு முழுவதும் அதி நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட 103 அமிர்த பாரத் ரயில் நிலையங்களை இன்று காலை காணொளி வாயிலாக திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.
இந்திய ரயில்வேயை நவீனமயமாக்குவதில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் இடம் பெற்றுள்ளன. அதில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க விரைவான வளர்ச்சியைக் மேம்படுத்தும் நோக்கில், அமிரித் பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் 1300 ரயில் நிலையங்களை பராமரிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் மொத்தம் 18 மாநிலங்கள் மற்றும் 86 மாவட்டங்கள் இதில் அடங்கும். முதற்கட்டமாக நாடு முழுவதும் 103 ரயில் நிலையங்கள் அதிநவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட தென் மாநிலங்களான தமிழ்நாட்டில் பரங்கிமலை, ஸ்ரீரங்கம், போளூர், திருவண்ணாமலை, விருதாச்சலம், சாமல்பட்டி, குழித்துறை, சூலூர்பேட்டை மற்றும் கர்நாடகாவில் 5 ரயில் நிலையங்கள், தெலுங்கானாவில் மூன்று ரயில் நிலையங்கள்,கேரளாவில் 3 ரயில் நிலையங்கள் உள்பட 19 ரயில் நிலையங்கள் அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன.
அதாவது சுத்தமான குடிநீர் வசதிகள், காத்திருப்பு அறைகள், எஸ்கலேட்டர் வசதிகள், உணவு விடுதிகள், இலவச வைஃபை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில் நாடு முழுவதும் அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட 103 ரயில் நிலையங்களை இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக திறந்து வைத்தார். ராஜஸ்தான் மாநிலம் பிகானீரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அங்கிருந்து காணொளி வாயிலாக அம்ரித் பாரத் ரயில் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.
இதனைத் தொடர்ந்து 26 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதனை அடுத்து அம்ரித் பாரத் ரயில் திட்டம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளது.
மனித உரிமைகளே மக்களின் உணர்வுகள்.. இன்று என்ன நாள் தெரியுமா!
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
வைக்கத்தாஷ்டமி திருவிழா ... வைக்கம் ஸ்தலத்தின் சிறப்புகளை அறிவோம்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
தங்கம் விலை நேற்று குறைந்த நிலையில் இன்று உயர்வு.... சவரனுக்கு ரூ.240 உயர்வு!
{{comments.comment}}