நிலச்சரிவில் சிக்கி சீர்குலைந்த.. வயநாட்டை பார்வையிட.. பிரதமர் மோடி நாளை கேரளா வருகிறார்!

Aug 09, 2024,05:56 PM IST

டெல்லி:   வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்த்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறவும் பிரதமர் நரேந்திர மோடி நாளை கேரளா வரவுள்ளார்.


கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை 29-ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் முண்டக்கை, சூரல்மலை, மேம்பாடி ஆகிய கிராமங்கள்  உருக்குலைந்து போனது. இந்த பகுதிகளில் உள்ள வீடுகள் அனைத்தும் மண்ணோடு மண்ணாக தரைமட்டமானது. இந்த நிலச்சரிவில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400 ஐக் கடந்து சென்றுள்ளது. மேலும் பலரை தேடும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது. 273 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 138 பேரை காணவில்லை. 




நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்கள் 14 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவில் மண்ணுக்குள் புதைந்த உடல்கள் மற்றும் உடல் உறுப்பு பாகங்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அடையாளம் காண முடியாத உடல்கள் ஒருபுறம் அடக்கம் செய்யும் பணியும் நடந்து வருகிறது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அவரது சகோதரி பிரியங்கா காந்தி, கேரள முதல்வர் பிரனாயி விஜயன், நடிகர் மோகன்லால், மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.


இந்நிலையில், பிரதமர் மோடி நாளை வயநாடு செல்கிறார். சிறப்பு விமானம் மூலம் கண்ணூர் விமான நிலையம் வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்ய உள்ளார். அத்துடன் முகாம்களில் தங்கியுள்ள பாதிக்கப்பட்ட மக்களையும் நேரில் சந்திக்க உள்ளார். பிரதமரின் வருகையையொட்டி வயநாடு மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த பயணத்தின் போது கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் உடன் இருப்பார்கள் என்ற தகவலும் தற்போது வெளிவந்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்