டெல்லி: நிலச்சரிவில் சிக்கி பெரும் சேதத்தை சந்தித்துள்ள கேரள மாநிலம் வயநாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகிற 10ம் தேதி செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள முண்டக்கை, மேப்பாடி உள்ளிட்ட பகுதிகள் நிலச்சரிவில் சிக்கி பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. இதுவரை 400க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கான வீடுகள், கட்டடங்கள் புதைந்து போய் விட்டன. இன்னும் 200க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை.

கேரளாவை மட்டுமல்லாமல் நாட்டையே உலுக்கிய இந்த நிலச்சரிவு தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதிலுமிருந்து நிதியுதவிகளும் குவிந்து வருகின்றன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் வந்து பார்வையிட்டுச் சென்றுள்ளார். கேரள மாநில ஆளுநரும் வந்து பார்வையிட்டார். மலையாள நடிகர் மோகன்லாலும் நேரில் வந்து பார்த்துள்ளார். இந்த நிலையில் பிரதமர் மோடி எப்போது வருவார் என்ற கேள்வி இருந்து வந்தது.
இந்த பின்னணியில் தற்போது பிரதமர் மோடி வயநாடு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வருகிற 10ம் தேதி சனிக்கிழமை பிரதமர் மோடி கண்ணூர் விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வயநாடு செல்வார். மேப்பாடி உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுவார். மேலும் நிவாரண முகாம்களுக்கும் பிரதமர் செல்லவுள்ளார். இவையெல்லாம் ஊகச் செய்திகளாகவே உள்ளன. அதிகாரப்பூர்வமாக இந்த பயணம் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. பிரதமர் அலுவலகம் இந்த பயணத் திட்டத்தை உறுதி செய்து அதிகாரப்பூர்வாக வெளியிடும் என்று கூறப்படுகிறது.
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}