காஸிரங்கா, அஸ்ஸாம்: அஸ்ஸாம் மாநிலம் காஸிரங்கா தேசிய புலிகள் சரணாலயம் மற்றும் பூங்காவுக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு யானை மீது அமர்ந்து சவாரி செய்து மகிழ்ந்தார்.
யானை சவாரி மட்டுமல்லாமல் ஜீப் சபாரியிலும் பிரதமர் மோடி ஈடுபட்டார். யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டது காஸிரங்கா பூங்கா. இந்த பூங்காவுக்கு முதல் முறையாக வருகை தந்துள்ளார் பிரதமர் மோடி. இன்று காலை அவர் மிஹமுக் பகுதியில் யானை சவாரி செய்தார். அதைத் தொடர்ந்து அதே பகுதியில் ஜீப் சபாரியிலும் பிரதமர் ஈடுபட்டார்.
பிரதமர் மோடியுடன், பூங்கா இயக்குநர் சோனாலி கோஷ் மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகள் உடன் சென்றனர்.
முன்னதாக காஸிலங்காவுக்கு நேற்று மாலை பிரதமர் வருகை தந்தார். 2 நாள் அஸ்ஸாம் பயணத்தின் ஒரு பகுதியாக அவர் காஸிரங்காவுக்கு வந்தார். இன்று பிற்பகல் ஜோர்ஹாட்டில் 125 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள அஹோம் ஜெனரல் லச்சித் பர்புக்கான் சிலையை பிரதமர் திறந்து வைக்கிறார்.
அதன் பின்னர் மெலங் மெதேலி போத்தார் என்ற இடத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு ரூ. 18,000 கோடி மதிப்பிலான திட்டங்கலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி வைப்பார்.
இதைத் தொடர்ந்து பொதுக்கூட்டடத்திலும் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசவுள்ளார்.
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
{{comments.comment}}