ஆட்சியமையுங்கள்.. பிரதமர் நரேந்திர மோடிக்கு.. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு முறைப்படி அழைப்பு!

Jun 07, 2024,06:55 PM IST

டெல்லி: ஆட்சி அமைக்க உரிமைக் கோரி இன்று மாலை  குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவைச் சந்தித்து கடிதம் வழங்கினார் பிரதமர் நரேந்திர மோடி. இதை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர், பிரதமர் மோடியை ஆட்சியமைக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.


தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்கள் மற்றும் எம்பிக்கள் கூடி இன்று நரேந்திர மோடியை, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக தேர்ந்தெடுத்தனர். இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி குழு ஆட்சி அமைக்க உரிமை கோரி குடியரசுத் தலைவரை சந்தித்தது..




நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் இன்று மாலை ராஷ்டிரபதி பவன் விரைந்தனர். அங்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்திந்தனர். அப்போது உரிமை கோரி பிரதமர் மோடி கடிதம் அளித்தார். அதைத் தொடர்ந்து பிரதமர் மோடியை ஆட்சியமைக்குமாறு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அழைப்பு விடுத்தார். பிரதமர் மோடி பதவியேற்பு விழா 9ம் தேதி மாலை 6 மணி அளவில் நடைபெறவுள்ளது. 3வது முறையாக பாஜக ஆட்சி அமையவுள்ளது. இந்த முறை கூட்டணி ஆட்சியாக அது மலருகிறது.


2024ம் ஆண்டிற்கான மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை நடந்து முடிந்தது. இந்த தேர்தலுக்கான முடிவுகள் கடந்த நான்காம் தேதி வெளியானது. இதில்  543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டணி 293 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக, பாஜக மூத்த தலைவரும், லோக்சபா தேர்தலுக்கு முன்பாக, பாரத ரத்னா விருது பெற்றவருமான எல்.கே.அத்வானியை அவரது வீட்டில் சந்தித்து பூங்கொத்து வழங்கி ஆசி பெற்றார் பிரதமர் மோடி. அதேபோல,  முரளி மனோகர் ஜோதியையும் சந்தித்து ஆசி பெற்றார் மோடி. 3 முறையாக பதவி ஏற்க உள்ளார் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்