கன்னியாகுமரி: கன்னியாகுமரி, விவேகானந்தர் பாறையில் கடந்த மூன்று நாட்களாக தியானத்தை மேற்கொண்டு வந்த பிரதமர் நரேந்திர மோடி இன்றுடன் தியானத்தை முடித்துக் கொண்டு திருவனந்தபுரத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்.
மூன்று நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் மாலை கன்னியாகுமரி வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்த பகவதி அம்மனை தரிசனம் செய்துவிட்டு படகு மூலம் விவேகானந்தர் பாறைக்கு சென்று தியானத்தை தொடங்கினார். கடந்த 18 மணி நேரமாக தியானம் செய்து வரும் பிரதமர் நரேந்திர மோடி அவ்வப்போது தியானத்தை விட்டு வெளியே வந்து சூரிய நமஸ்காரம் மற்றும் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.
காவி உடையுடன், கழுத்தில் ருத்ராட்ச மாலை, நெற்றியில் திருநீர் பட்டை அணிந்து கொண்டு நீர் ஆகாரம் மட்டுமே அருந்தி தியானத்தை செய்து வருவதாக தகவல் வெளியானது. இதனுடன் மௌனம் விரதமும் இருந்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், எதிர் கட்சிகள் கடும் விமர்சனம் செய்து வந்தனர்.
இந்த சூழ்நிலையில் இன்று மாலை 3: 25 மணி அளவில் விவேகானந்தர் பார்வையை விட்டு வெளியே வந்து திருவள்ளுவர் சிலைக்கு வந்தார் பிரதமர் மோடி. அங்கு மலர் தூவி வள்ளுவருக்கு அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து படகுமூலம் கடற்கரைக்கு வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் தளத்திற்குச் சென்று ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றார். திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்ல இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
கடந்த இரண்டு நாட்களாக கன்னியாகுமரியை போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்திருந்தது. பிரதமர் தொடர்ந்து தியானத்தில் ஈடுபட்டு வந்ததால், கன்னியாகுமரி விவேகானந்தர் பாறைக்கு சுற்றுலா பயணிகள் அவ்வப்போது தடுக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது பிரதமர் கிளம்பிச் சென்று விட்டதால், சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீங்கியுள்ளன.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}