17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை செய்ததாக புகார்.. எடியூரப்பா மீது பாய்ந்தது போக்சோ வழக்கு!

Mar 15, 2024,11:31 AM IST

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான பிஎஸ் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


17 வயது சிறுமியும், அவரது தாயாரும் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவிடம் உதவி கேட்டு சென்றுள்ளனர். அப்போது அந்த சிறுமியை தனி அறைக்கு அழைத்து சென்று எடியூரப்பா பாலியல் துன்புறுத்தல் செய்தாக புகார் எழுந்துள்ளது. இதை வெளியே கூறக்கூடாது என்றும், கூறினால் பல்வேறு பிரச்சனைகள் எழும் என்று, எடியூரப்பா மிரட்டியதாகவும் சிறுமியின் தாயார் போலீஸில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியுள்ளார்.  




சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், பெங்களூரு சதாசிவநகர் போலீசார் நேற்று இரவு வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை போலீசார் உறுதி செய்துள்ளனர். இது குறித்து தற்போது போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


பிஎஸ் எடியூரப்பா கர்நாடகாவில் 3 முறை முதல்வராக பதவி வகித்தவர். பாஜகவின் மூத்த தலைவர்களுள் முக்கியமானவர். பலம் வாய்ந்த லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்தவர். 2021ம் ஆண்டு முதல்வர் பதவியில் இருந்து விலகினார் எடியூரப்பா.


18 வயதிற்கு உட்பட்ட சிறுவர் சிறுமியர்கள் மீதான பாலியல் அத்துமீறல்களை தடுக்கும் வகையில் மத்திய அரசால் கடந்த 2012 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எடியூரப்பா மீது பாய்ந்த இந்த வழக்கால் கர்நாடகவில் உள்ள அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில், போக்சோ வழக்கு குறித்து கர்நாடக முன்னாள் முதல்வர்  எடியூரப்பா கூறுகையில், "என்மீது எழுந்துள்ள குற்றச்சாட்டை சட்டரீதியாக எதிர்கொள்வேன். புகார் கூறியுள்ள பெண் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது" என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்