17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை செய்ததாக புகார்.. எடியூரப்பா மீது பாய்ந்தது போக்சோ வழக்கு!

Mar 15, 2024,11:31 AM IST

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான பிஎஸ் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


17 வயது சிறுமியும், அவரது தாயாரும் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவிடம் உதவி கேட்டு சென்றுள்ளனர். அப்போது அந்த சிறுமியை தனி அறைக்கு அழைத்து சென்று எடியூரப்பா பாலியல் துன்புறுத்தல் செய்தாக புகார் எழுந்துள்ளது. இதை வெளியே கூறக்கூடாது என்றும், கூறினால் பல்வேறு பிரச்சனைகள் எழும் என்று, எடியூரப்பா மிரட்டியதாகவும் சிறுமியின் தாயார் போலீஸில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியுள்ளார்.  




சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், பெங்களூரு சதாசிவநகர் போலீசார் நேற்று இரவு வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை போலீசார் உறுதி செய்துள்ளனர். இது குறித்து தற்போது போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


பிஎஸ் எடியூரப்பா கர்நாடகாவில் 3 முறை முதல்வராக பதவி வகித்தவர். பாஜகவின் மூத்த தலைவர்களுள் முக்கியமானவர். பலம் வாய்ந்த லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்தவர். 2021ம் ஆண்டு முதல்வர் பதவியில் இருந்து விலகினார் எடியூரப்பா.


18 வயதிற்கு உட்பட்ட சிறுவர் சிறுமியர்கள் மீதான பாலியல் அத்துமீறல்களை தடுக்கும் வகையில் மத்திய அரசால் கடந்த 2012 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எடியூரப்பா மீது பாய்ந்த இந்த வழக்கால் கர்நாடகவில் உள்ள அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில், போக்சோ வழக்கு குறித்து கர்நாடக முன்னாள் முதல்வர்  எடியூரப்பா கூறுகையில், "என்மீது எழுந்துள்ள குற்றச்சாட்டை சட்டரீதியாக எதிர்கொள்வேன். புகார் கூறியுள்ள பெண் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது" என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்