17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை செய்ததாக புகார்.. எடியூரப்பா மீது பாய்ந்தது போக்சோ வழக்கு!

Mar 15, 2024,11:31 AM IST

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான பிஎஸ் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


17 வயது சிறுமியும், அவரது தாயாரும் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவிடம் உதவி கேட்டு சென்றுள்ளனர். அப்போது அந்த சிறுமியை தனி அறைக்கு அழைத்து சென்று எடியூரப்பா பாலியல் துன்புறுத்தல் செய்தாக புகார் எழுந்துள்ளது. இதை வெளியே கூறக்கூடாது என்றும், கூறினால் பல்வேறு பிரச்சனைகள் எழும் என்று, எடியூரப்பா மிரட்டியதாகவும் சிறுமியின் தாயார் போலீஸில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியுள்ளார்.  




சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், பெங்களூரு சதாசிவநகர் போலீசார் நேற்று இரவு வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை போலீசார் உறுதி செய்துள்ளனர். இது குறித்து தற்போது போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


பிஎஸ் எடியூரப்பா கர்நாடகாவில் 3 முறை முதல்வராக பதவி வகித்தவர். பாஜகவின் மூத்த தலைவர்களுள் முக்கியமானவர். பலம் வாய்ந்த லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்தவர். 2021ம் ஆண்டு முதல்வர் பதவியில் இருந்து விலகினார் எடியூரப்பா.


18 வயதிற்கு உட்பட்ட சிறுவர் சிறுமியர்கள் மீதான பாலியல் அத்துமீறல்களை தடுக்கும் வகையில் மத்திய அரசால் கடந்த 2012 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எடியூரப்பா மீது பாய்ந்த இந்த வழக்கால் கர்நாடகவில் உள்ள அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில், போக்சோ வழக்கு குறித்து கர்நாடக முன்னாள் முதல்வர்  எடியூரப்பா கூறுகையில், "என்மீது எழுந்துள்ள குற்றச்சாட்டை சட்டரீதியாக எதிர்கொள்வேன். புகார் கூறியுள்ள பெண் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது" என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்