பிறந்த நாளில் ஒரு தாய்க்கு பிள்ளையானாய்.. நினைவு நாளில் தாய்த் தமிழ் நாட்டுக்கே மகனானாய்.. வைரமுத்து

Aug 07, 2024,02:30 PM IST

சென்னை:   முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி, கவிஞர் வைரமுத்து எக்ஸ் தள பதிவில் நினைவாஞ்சலி செலுத்தியுள்ளார்.


முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதியின் 6ம் ஆண்டு நினைவு நாள் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு கட்சி தலைவர்களும், முக்கிய பிரபலங்களும் சென்னை ஓமந்தூர் வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். 




கவிஞர் வைரமுத்துவும் கலைஞரின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தினார். அத்துடன் எக்ஸ் பக்கத்தில் கலைஞரின் நினனவை கூறும் வண்ணம் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:


உன் 

பிறந்தநாளுக்கும்

நினைவுநாளுக்கும்

வேறுபாடு ஒன்றுண்டு


நீ பிறந்த நாளில்

ஒரே ஒரு தாய்க்கு மட்டுமே

பிள்ளையாகினாய்


நினைவு நாளில்

தாய்த் தமிழ் நாட்டுக்கே

மகனாகினாய்


குடகுமலை மழையால்

மேட்டூர் நீர்மட்டம்

உயர்வது மாதிரி

ஒவ்வோர் ஆண்டிலும்

உன் புகழ்மட்டம்

கூடிக்கொண்டே போகிறது


வணங்குகிறோம் உங்களை;

வாழ்த்துங்கள் எங்களை என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்