திருப்பூர்: மூன்று நாட்கள் போலீஸ்காவலில் எடுத்து விசாரித்து வரும் மகாவிஷ்ணுவை, இன்று திருப்பூர் அழைத்து சென்று பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனத்தில் வைத்து போலீஸார் விசாரித்தனர்.
சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சர்ச்சைக்குரிய சொற்பொழிவு ஆற்றிய விவகாரம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாகவும் மகாவிஷ்ணு மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. இந்த புகாரின் அடிப்படையில் மகாவிஷ்ணு என்பவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மகாவிஷ்ணுவை போலீசார் ஆஜர் படுத்தினர்.அப்போது மூன்று நாள் காவல் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதற்கிடையே, மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் குழு விசாரணை தீவிரமடைந்துள்ளது. விரைவில் இதுதொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்படும். அதன் பேரில் அரசு மேல் நடவடிக்கைகளை தீவிர படுத்தப்படும் எனவும் கூறியுள்ளது.
இந்த நிலையில் மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணுவை சென்னை போலீசார் திருப்பூருக்கு அருகே உள்ள பரம்பொருள் பவுண்டேஷன் அலுவலகத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.அங்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விசாரணை முடிவில் மீண்டும் மகாவிஷ்ணுவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நாளை சென்னைக்கு அழைத்து வர உள்ளனர்.
மதுரையைச் சேர்ந்தவராக இருந்தாலும் கூட திருப்பூரில் செட்டிலானவர் மகாவிஷ்ணு. அங்குதான் அவரது அறம் பொருள் பவுண்டேஷன் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}