- மஞ்சுளா தேவி
சென்னை: காவல்துறை பணியினை சிறப்பாகும் வகையில் என்னவெல்லாம் செயல்படுத்தலாம் என பொதுமக்களிடமிருந்து கருத்துக்கள் வரவேற்கப்படுவதாக காவல்துறை அறிவித்துள்ளது.
நாட்டின் மிக முக்கியமான சேவை காவல்துறை பணிதான். ஊரெல்லாம் நிம்மதியாக இருக்க தங்களை அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றுவோர்தான் காவல்துறையினர். அப்படிப்பட்ட காவல் பணியை அறப்பணி என்று சொல்வார்கள்.
நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி மக்கள் பாதுகாப்பாகவும் ,மன நிம்மதியுடனும், வாழ்வதற்கு காவல்துறை பெரும் பங்கு வகித்து வருகிறது. இந்த நிலையில் காவல்துறையின் பணிகளை எப்படியெல்லாம் சிறப்பாக செயல்படுத்தலாம் என பொதுமக்களிடம் தங்களின் கருத்துக்களை தபால் மூலம் எழுதி அனுப்பலாம் என காவல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காவல்துறையின் பணியை செம்மையாக்கும் வண்ணம் தமிழ்நாடு அரசு 2022 ஆம் ஆண்டு ஐந்தாவது காவல் ஆணையம் (police commission) அமைத்துள்ளது. இந்க ஆணையமானது, சென்னை அசோக் நகர் காவல் பயிற்சி கல்லூரி அலுவலக வளாகத்தில் இயங்கி வருகிறது.
காவல் பணியினை செம்மைப்படுத்த பொதுமக்களிடமிருந்து கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. தபால் மூலம் தெரிவிக்க விரும்புவோர் கீழ்க்கண்ட முகவரிக்கு தபாலில் தங்கள் கருத்துக்களை எழுதி அனுப்பலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
தலைவர், 5வது காவல் ஆணையம் , அசோக் நகர், சென்னை -83.
மின்னஞ்சல் அனுப்ப விரும்புவோர் கீழ்க்கண்ட மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் :
fifthpolicecommission@gmail.com
நேரில் சந்தித்து மனு அளிக்க விரும்புபவர்கள் 05 .12. 2023 அன்று காலையில் 10:30 மணி அளவில் பிற்பகல் 01:30 மணி வரை மேற்கண்ட முகவரியில் நேரடியாக சமர்ப்பிக்கலாம்.
மேல் விவரங்களுக்கு கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
கைபேசி எண்: 9791987112
காவல் கண்காணிப்பாளர்,
5வது காவல் ஆணையம்,
அசோக் நகர் ,
சென்னை -83 - என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை குறித்து உங்களிடம் ஏதாவது யோசனை இருக்கா.. ஆக்கப்பூர்வமான யோசனைகள் இருந்தால் அனுப்பி வையுங்க.
பொறுமையை சோதிக்கும் கூட்டணிக் கட்சிகள்.. அமைதியாக இருக்கும் திமுக.. என்ன நடக்கும்?
தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பட்ஜெட்:பிப்ரவரி 12ல் மதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: வைகோ
தமிழகத்தில் ஆட்சியாளர்களை எதிர்த்து எதிர்மறை வாக்குகள் அதிகரித்து வருகிறது: ஜி.கே.வாசன் பேட்டி
ராமதாஸ் பாமக வந்தால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்...திருமாவளவன் உறுதி
கிச்சனில் இருக்கும்போது கவனம் தோழியரே.. எண்ணெய் தீ விபத்தை.. தடுப்பது எப்படி?
ஒரு வாரத்துக்கு நகைக் கடை பக்கமே போகாமல் இருந்தால் தங்கம் விலை குறையுமா!?
பிப்ரவரி 17-ல் தமிழக இடைக்கால பட்ஜெட்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
இந்திய சீனியர் அணிக்கு வைபவ் வர முடியாது.. குறுக்கே நிற்கும் கெளஷிக் (ஐசிசி விதி)!
முகம்து சிராஜுக்கு அடித்த லக்கி பிரைஸ்.. ராணா வெளியேறினார்.. சிராஜுக்கு வாய்ப்பு!
{{comments.comment}}