- மஞ்சுளா தேவி
சென்னை: காவல்துறை பணியினை சிறப்பாகும் வகையில் என்னவெல்லாம் செயல்படுத்தலாம் என பொதுமக்களிடமிருந்து கருத்துக்கள் வரவேற்கப்படுவதாக காவல்துறை அறிவித்துள்ளது.
நாட்டின் மிக முக்கியமான சேவை காவல்துறை பணிதான். ஊரெல்லாம் நிம்மதியாக இருக்க தங்களை அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றுவோர்தான் காவல்துறையினர். அப்படிப்பட்ட காவல் பணியை அறப்பணி என்று சொல்வார்கள்.
நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி மக்கள் பாதுகாப்பாகவும் ,மன நிம்மதியுடனும், வாழ்வதற்கு காவல்துறை பெரும் பங்கு வகித்து வருகிறது. இந்த நிலையில் காவல்துறையின் பணிகளை எப்படியெல்லாம் சிறப்பாக செயல்படுத்தலாம் என பொதுமக்களிடம் தங்களின் கருத்துக்களை தபால் மூலம் எழுதி அனுப்பலாம் என காவல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காவல்துறையின் பணியை செம்மையாக்கும் வண்ணம் தமிழ்நாடு அரசு 2022 ஆம் ஆண்டு ஐந்தாவது காவல் ஆணையம் (police commission) அமைத்துள்ளது. இந்க ஆணையமானது, சென்னை அசோக் நகர் காவல் பயிற்சி கல்லூரி அலுவலக வளாகத்தில் இயங்கி வருகிறது.
காவல் பணியினை செம்மைப்படுத்த பொதுமக்களிடமிருந்து கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. தபால் மூலம் தெரிவிக்க விரும்புவோர் கீழ்க்கண்ட முகவரிக்கு தபாலில் தங்கள் கருத்துக்களை எழுதி அனுப்பலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
தலைவர், 5வது காவல் ஆணையம் , அசோக் நகர், சென்னை -83.
மின்னஞ்சல் அனுப்ப விரும்புவோர் கீழ்க்கண்ட மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் :
fifthpolicecommission@gmail.com
நேரில் சந்தித்து மனு அளிக்க விரும்புபவர்கள் 05 .12. 2023 அன்று காலையில் 10:30 மணி அளவில் பிற்பகல் 01:30 மணி வரை மேற்கண்ட முகவரியில் நேரடியாக சமர்ப்பிக்கலாம்.
மேல் விவரங்களுக்கு கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
கைபேசி எண்: 9791987112
காவல் கண்காணிப்பாளர்,
5வது காவல் ஆணையம்,
அசோக் நகர் ,
சென்னை -83 - என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை குறித்து உங்களிடம் ஏதாவது யோசனை இருக்கா.. ஆக்கப்பூர்வமான யோசனைகள் இருந்தால் அனுப்பி வையுங்க.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}