கடலூர்: தமிழ்நாட்டில் சமீப காலமாகவே நிறைய என்கவுண்டர் சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், கடலூரில் லாரி ஓட்டுநர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட விஜய் என்பவரை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்தார்.
தமிழ்நாட்டில் இதுவரை 120க்கும் மேற்பட்ட என்கவுண்டர் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. அதிலும் திமுக ஆட்சியில் முதல்வர் மு க ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தொடர்ந்து என்கவுண்டர் செய்யப்படும் குற்றவாளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதாவது கொலை, கொள்ளை, போதை பொருள் கடத்தல், உள்ளிட்ட வழக்குகளில் இதுவரை 16 குற்றவாளிகள் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் மதுரையில் கிளாமர் காளி கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியான சுபாஷ் சந்திர போஸ் என்பவர் தப்பிக்க முயன்றதாக கூறி போலீசார் என்கவுண்டரில் படுகொலை செய்தனர்.
அந்த வரிசையில் கடலூர் மாவட்டம் புதுச்சத்திரத்தில் மூன்று வெவ்வேறு இடங்களில் லாரி ஓட்டுனர்களை அரிவாளால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட முட்டை விஜய் என்பவரை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்தனர். லாரி ஓட்டுநர்களிடம் ஆறு பேர் கொண்ட கும்பல் வழிப்பறியில் ஈடுபட்ட நிலையில், அவர்களை பிடிக்க முயன்ற போது போலீஸாரை தாக்கி விட்டு தப்பிச் ஓடியுள்ளனர். இதனால் தற்காப்புக்காகவே விஜய் என்பவரை என்கவுண்டரில்
கொலை செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் விஜய்(19) புதுச்சேரியை சேர்ந்தவர் என்பதும், இவர் மீது 30க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
கரூர் துயர சம்பவம்...விஜய் தாமதமாக வந்ததே காரணம்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் விளக்கம்!
கரூர் சம்பவம்...முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அரசு தவறிவிட்டது: சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி!
லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு: நடிகர் விஷால் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
தீபாவளி வருது.. 4 நாளா லீவு கிடைச்சா நல்லாருக்கும்.. எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்!
கல்வி உதவித்தொகை வழங்காமல் நிறுத்தி வைப்பதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும்: அன்புமணி ராமதாஸ்!
வானிலை விடுத்த எச்சரிக்கை: 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்... 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!
தமிழ்க் கலாச்சாரத்தைக் கேவலப்படுத்தும் பிக் பாஸ்.. தடை செய்யுங்கள்.. த.வா.க. வேல்முருகன் ஆவேசம்
பீகார் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன்.. நிதீஷ் குமார் தோற்பார்.. பிரஷாந்த் கிஷோர்
எல்லாமே பக்காவா செட் ஆயிருச்சு.. வட கிழக்கு பருவ மழை இன்று அல்லது நாளை தொடங்கலாம்!
{{comments.comment}}