கள்ளக்குறிச்சி: அனுமதி இன்றி கொடிக்கம்பம் வைத்ததற்காக கள்ளக்குறிச்சியில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யட்டுள்ளது.
நடிகர் விஜய் பிப்ரவரி 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்து அறிக்கையையும் வெளியிட்டார். நாடாளுமன்ற தேர்தல் இல்லங்க... 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தல் தான் எனது இலக்கு. அதுவரைக்கும் கமிட்டான படங்களை நடித்து கொடுத்து விட்டு வருகிறேன் என்று கூறியிருப்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில், கட்சியின் பெயர் தமிழக வெற்றி கழகம் என்று இருந்தது. தற்போது அதில் இருந்த எழுத்துப் பிழை நீக்கப்பட்டு கட்சியின் பெயர் தமிழக வெற்றிக் கழகம் என மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடந்தது.
இதற்கிடையே, கள்ளிக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை சட்டசபைத் தொகுதியில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கொடிக் கம்பங்கள் வைக்கப்பட்டன. காவல் துறையின் அனுமதி பெறாமல் கொடுக்கம்பங்கள் வைக்கப்பட்டதால், தமிழக வெற்றி கழக மாவட்ட பொறுப்பாளர் பரணி பாலாஜி உள்பட 20க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அனுமதி இன்றி வைக்கப்பட்ட கொடி கம்பங்கள் தற்போது அகற்றப்பட்டுள்ளன.
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}