"விஜயலட்சுமி".. சீமானுக்கு போலீஸ் சம்மன்.. விசாரணைக்குப் பின் கைது செய்யப்படுவாரா?

Sep 09, 2023,12:06 PM IST

சென்னை: நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.


நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது பல்வேறு புகார்களை நடிகை விஜயலட்சுமி சுமத்தியுள்ளார். தன்னைக் கல்யாணம் செய்து கொண்டதாகவும், கட்டாயப்படுத்தி கருவைக் கலைக்க வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதுதொடர்பான முக்கிய போன் ஆதாரங்கள், மெசேஜ்கள், பணம் கொடுத்த வங்கி விவரங்களையும் விஜயலட்சுமி போலீசில் அளித்துள்ளார். 


விஜயலட்சுமியிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக அவருக்கு மருத்துவ பரிசோதனையும் அளிக்கப்பட்டது. நடிகை விஜயலட்சுமியை மாஜிஸ்திரேட் முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தி வாக்குமூலமும் பதிவு செய்துள்ளனர். அவருக்கு 8 முறை கரு உண்டாகி அதை கலைத்ததாக, சீமான் தனக்கு தொந்தரவு, தொல்லை, கொடுமை கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார் விஜயலட்சுமி.


கருக்கலைப்பு நடந்ததா என்பதை உறுதி செய்வதற்காகவே மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், விஜயலட்சுமி வழக்கில் நேற்று இரவு சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சீமானுக்கு அனுப்பப்பட்டுள்ள சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் செவ்வாய்க்கிழமையன்று ஆஜராவதாகவும், அதுவரை அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் சீமான் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை போலீஸார் ஏற்றுக் கொண்டுள்ளனர். 


இந்த நிலையில், விஜயலட்சுமி விவகாரத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர் நாம் தமிழர் கட்சியினர்.   இது பொய்யான புகார். அரசியல் ரீதியாக சீமானுக்கு எதிராக வைக்கப்படும் புகார் என்று அக்கட்சியினர் கூறி வருகின்றனர். மேலும், விஜயலட்சுமி சீமானிடம் பணம் பறிக்க இப்படி மிரட்டுகிறார் என்றும் நாம் தமிழர் கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.


சீமானும் கூட சமீபத்தில் நடந்த பிரஸ் மீட்டின்போது தன் மீது போகிற போக்கில் ஒரு பெண் சுமத்தும் குற்றச்சாட்டை தமிழ்நாட்டு மக்கள் நம்பக் கூடாது என்று ஆவேசமாக கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்