சென்னை: சர்ச்சைக்குரிய சொற்பொழிவு ஆற்றிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் ஆஜர் செய்யப்பட்டார்.
சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் சொற்பொழிவு ஆற்றிய விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. மகாவிஷ்ணு மீது தொடர்ந்து பல புகார்கள் எழுந்ததால் அவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து மகாவிஷ்ணுவை கைது புழல் சிறையில் அடைத்தனர்.
.jpg)
புழல் சிறையில் அடைக்கப்பட்ட மகாவிஷ்ணுவின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைவதால் அவரை இன்று சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பலத்த பாதுகாப்புடன் அவரை வேனில் கொண்டு வந்து கோர்ட்டுக்குள் அழைத்துச் சென்றது போலீஸ். மகாவிஷ்ணுவை ஏழு நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து மனு செய்துள்ளனர். மறுபக்கம் ஜாமின் கோரி மகாவிஷ்ணு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் விசாரணை தீவிரமடைந்துள்ளது. விரைவில் இதுதொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்படும். அதன் பேரில் அரசு மேல் நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று கருதப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}