அசோக் நகர் சர்ச்சை பேச்சு.. பலத்த காவலுடன்.. சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மகாவிஷ்ணு

Sep 11, 2024,06:21 PM IST

சென்னை:   சர்ச்சைக்குரிய சொற்பொழிவு ஆற்றிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் ஆஜர் செய்யப்பட்டார்.


சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்  மகாவிஷ்ணு என்பவர் சொற்பொழிவு ஆற்றிய விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. மகாவிஷ்ணு மீது தொடர்ந்து பல புகார்கள் எழுந்ததால் அவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து மகாவிஷ்ணுவை கைது புழல் சிறையில் அடைத்தனர்.




புழல் சிறையில் அடைக்கப்பட்ட மகாவிஷ்ணுவின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைவதால் அவரை இன்று சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பலத்த பாதுகாப்புடன் அவரை வேனில் கொண்டு வந்து கோர்ட்டுக்குள் அழைத்துச் சென்றது போலீஸ்.  மகாவிஷ்ணுவை ஏழு நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து மனு செய்துள்ளனர். மறுபக்கம் ஜாமின் கோரி மகாவிஷ்ணு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல்  செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதற்கிடையே, மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் விசாரணை தீவிரமடைந்துள்ளது. விரைவில் இதுதொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்படும். அதன் பேரில் அரசு மேல் நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று கருதப்படுகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்