ராகுல் காந்தியின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட தேர்தல் பறக்கும் படையினர்

Apr 15, 2024,01:45 PM IST

சென்னை : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பயணம் செய்த ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி, இந்த முறையும் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார். இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ம் தேதி நடக்கும் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவில் கேரளா மாநிலத்திற்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ராகுல் காந்தி, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 


ஏப்ரல் 15ம் தேதி துவங்கி, ஏப்ரல் 22ம் தேதி வரை தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார். இதற்காக டில்லியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் இன்று காலை தமிழகம் வந்தார். அப்போது அவர் வந்த ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டுள்ளனர். கேரளாவிற்கு பிரச்சாரத்திற்கு வருபவர் எதற்காக தமிழகம் வர வேண்டும். நேரடியாக கேரளாவிற்கே சென்றிருக்கலாமே என அவரிடம் கேள்வி எழுப்பி உள்ளனர். 




ஏற்கனவே தமிழகத்தில் அதிமுக, திமுக என பாரபட்சம் இன்றி பல விஐபி.,க்கள் செல்லும் வாகனங்களையும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டு வருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை நடத்தப்பட்ட வாகன சோதனையில் இதுவரை ரூ.4650 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இன்று ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரும் சோதனை செய்யப்பட்டுள்ளது. 


இன்று ராகுல் மற்றும் பிரதமர் மோடி இருவருமே கேரளாவின் பல பகுதிகளில் நடக்கும் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பங்கேற்க உள்ளனர். இருவரும் ஒரே நேரத்தில் கேரளாவிற்கு வருவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் சோதனை செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

news

ஓடி விளையாடு பெண்ணே

news

என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?

news

செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் வைகாசி மாத பௌர்ணமி.. சிறப்பு!

news

தக்லைஃப் படத்தின் வழக்கு ஜூன் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு

news

டி20 கிரிக்கெட்டின் சிறந்த வீரர்.. நிக்கோலஸ் பூரன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!

news

இந்திய மாணவருக்கு கைவிலங்கிட்டு.. தரையில் கிடத்தி.. அமெரிக்க விமான நிலையத்தில் அராஜகம்

news

தமிழ்நாட்டில் 2026ல் ஆட்சி மாற்றம் வரும்.. பாஜக கூட்டணி குறித்து சொல்ல முடியாது: டாக்டர் ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்