சென்னை : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பயணம் செய்த ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி, இந்த முறையும் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார். இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ம் தேதி நடக்கும் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவில் கேரளா மாநிலத்திற்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ராகுல் காந்தி, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
ஏப்ரல் 15ம் தேதி துவங்கி, ஏப்ரல் 22ம் தேதி வரை தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார். இதற்காக டில்லியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் இன்று காலை தமிழகம் வந்தார். அப்போது அவர் வந்த ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டுள்ளனர். கேரளாவிற்கு பிரச்சாரத்திற்கு வருபவர் எதற்காக தமிழகம் வர வேண்டும். நேரடியாக கேரளாவிற்கே சென்றிருக்கலாமே என அவரிடம் கேள்வி எழுப்பி உள்ளனர்.

ஏற்கனவே தமிழகத்தில் அதிமுக, திமுக என பாரபட்சம் இன்றி பல விஐபி.,க்கள் செல்லும் வாகனங்களையும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டு வருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை நடத்தப்பட்ட வாகன சோதனையில் இதுவரை ரூ.4650 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இன்று ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரும் சோதனை செய்யப்பட்டுள்ளது.
இன்று ராகுல் மற்றும் பிரதமர் மோடி இருவருமே கேரளாவின் பல பகுதிகளில் நடக்கும் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பங்கேற்க உள்ளனர். இருவரும் ஒரே நேரத்தில் கேரளாவிற்கு வருவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் சோதனை செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி
அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்
எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?
{{comments.comment}}