Ponga special buses.. 3 நாட்களில் 6.40 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்குப் பயணம்!

Jan 13, 2025,05:18 PM IST

சென்னை: பொங்கல் பண்டிகை முன்னிட்டு தொடர் விடுமுறை எதிரொலியாக, கடந்த மூன்று நாட்களில் 6 லட்சத்து 40 ஆயிரத்து 465 பேர் அரசு பேருந்துகளில் பயணம் செய்துள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது.


தமிழர் திருநாளாம் தைத்திருநாள் நாளை தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பள்ளி, கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


தமிழரின் பாரம்பரிய விளையாட்டுக்களான ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள காளைகளும் காளையர்களும் தயாராகி வருகின்றனர். மறுபக்கம் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்திற்காக மக்கள் வீடுகளை தூய்மை செய்வது, வண்ணம் பூசுவது, வீட்டை அலங்கரிப்பது,பொங்கலுக்குத் தேவையான பொருட்களை வாங்குவது என மக்கள் பிசியாக பரபரப்பாக இயங்கிக் கொண்டு வருகின்றனர். 




இதற்கிடையே பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக மக்கள் கடந்த சனிக்கிழமை முதலே பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களையும் முற்றுகையிட துவங்கிவிட்டனர். அதே சமயம் தொடர் விடுமுறை என்பதால் மக்கள் தங்கள் பொழுதுகளைக் கழிக்க சுற்றுலா தலங்களுக்கும் செல்கின்றனர். 


சென்னையில் உள்ள கோயம்பேடு, மாதவரம், கிளாம்பாக்கம்,ஆகிய பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இருப்பினும் பேருந்துகளில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக  அரசு சார்பில் சிறப்பு பேருந்துகளை இயக்குவதோடு, பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு  வருகிறது.மக்கள் பாதுகாப்பான போக்குவரத்து சேவையை பயன்படுத்தி பயணம் செய்து வருகின்றனர்.


பொங்கல் விடுமுறை நாளை தான் துவங்க உள்ளது. இருந்தாலும்கூட முன்கூட்டியே  மக்கள்  அரசு பேருந்துகளில் அதிக அளவில் பயணம் செய்து வருகின்றனர். கடந்த மூன்று நாட்களில் மட்டும் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் எவ்வளவு பேர் அரசு பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர் என்ற தகவலை தமிழ்நாடு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. 


அதன்படி பொங்கல் பண்டிகை முன்னிட்டு சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு கடந்த மூன்று நாட்களில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளை விட கூடுதலாக 11,463 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 6 லட்சத்து 40 ஆயிரத்து 465 பேர் பயணம் செய்துள்ளனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிக அளவிலான மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள். காலையிலிருந்தே பேருந்து நிலையங்களில் கூட்டம் அலை மோதுகிறது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Weather Update: தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்: வானிலை மையம் தகவல்!

news

இஸ்ரேலுக்கு கருணை காட்ட மாட்டோம்.. போர் தொடங்கி விட்டது.. ஈரான் மதத் தலைவர் கமேனி ஆவேசம்!

news

கீழடி அகழாய்வை நிராகரித்தால் .... முதல் குரலாக அதிமுகவின் குரல் ஒலிக்கும்: ஆர்.பி.உதயகுமார்

news

வாசக் கருவேப்பிலையே.. எடுத்து எரியாதீங்க.. அப்படியே சாப்பிடுங்க.. ரொம்ப நல்லது!

news

தொழில்துறை வளரவில்லை.. அமைச்சர் பிடிஆர் பேச்சுக்கு முதல்வரின் பதில் என்ன.. அன்புமணி கேள்வி!

news

SMART WATER ATM: சென்னையில் கட்டணமில்லா குடிநீர் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

news

3ம் நாட்டின் மத்தியஸ்தத்தை எப்போதும் இந்தியா ஏற்காது.. டிரம்ப்பிடம் கூறிய பிரதமர் மோடி

news

ரயில்வேயில் 6180 டெக்னீஷியன் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு

news

காலையிலேயே வருமான வரித்துறை அதிரடி.. சீஷெல் ஹோட்டல்களில் ரெய்டு.. சிக்கியது என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்