சென்னை: பொங்கல் பண்டிகை முன்னிட்டு தொடர் விடுமுறை எதிரொலியாக, கடந்த மூன்று நாட்களில் 6 லட்சத்து 40 ஆயிரத்து 465 பேர் அரசு பேருந்துகளில் பயணம் செய்துள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழர் திருநாளாம் தைத்திருநாள் நாளை தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பள்ளி, கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழரின் பாரம்பரிய விளையாட்டுக்களான ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள காளைகளும் காளையர்களும் தயாராகி வருகின்றனர். மறுபக்கம் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்திற்காக மக்கள் வீடுகளை தூய்மை செய்வது, வண்ணம் பூசுவது, வீட்டை அலங்கரிப்பது,பொங்கலுக்குத் தேவையான பொருட்களை வாங்குவது என மக்கள் பிசியாக பரபரப்பாக இயங்கிக் கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக மக்கள் கடந்த சனிக்கிழமை முதலே பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களையும் முற்றுகையிட துவங்கிவிட்டனர். அதே சமயம் தொடர் விடுமுறை என்பதால் மக்கள் தங்கள் பொழுதுகளைக் கழிக்க சுற்றுலா தலங்களுக்கும் செல்கின்றனர்.
சென்னையில் உள்ள கோயம்பேடு, மாதவரம், கிளாம்பாக்கம்,ஆகிய பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இருப்பினும் பேருந்துகளில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகளை இயக்குவதோடு, பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.மக்கள் பாதுகாப்பான போக்குவரத்து சேவையை பயன்படுத்தி பயணம் செய்து வருகின்றனர்.
பொங்கல் விடுமுறை நாளை தான் துவங்க உள்ளது. இருந்தாலும்கூட முன்கூட்டியே மக்கள் அரசு பேருந்துகளில் அதிக அளவில் பயணம் செய்து வருகின்றனர். கடந்த மூன்று நாட்களில் மட்டும் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் எவ்வளவு பேர் அரசு பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர் என்ற தகவலை தமிழ்நாடு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி பொங்கல் பண்டிகை முன்னிட்டு சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு கடந்த மூன்று நாட்களில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளை விட கூடுதலாக 11,463 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 6 லட்சத்து 40 ஆயிரத்து 465 பேர் பயணம் செய்துள்ளனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிக அளவிலான மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள். காலையிலிருந்தே பேருந்து நிலையங்களில் கூட்டம் அலை மோதுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கடந்த 2 நாட்களாக அமைதியாக இருந்து வந்த தங்கம் விலை இன்று குறைந்தது... எவ்வளவு குறைவு தெரியுமா?
ஆலயம் தொழுவது சாலவும் நன்று.. அவ்வளவு நன்மைகள் உள்ளன கோவிலுக்கு செல்வதில்!
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
முதல் முறையாக.. சொன்ன நேரத்துக்கு முன்பே வந்து சேர்ந்த தவெக தலைவர் விஜய்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 09, 2025... இன்று வெற்றிகள் அதிகரிக்கும்
தஞ்சை பெருவுடையார் கோயில் கல்வெட்டில் இடம் பெற்ற ஒரு பெண்ணின் பெயர்.. யார் அவர்?
விழாக்கோலம் பூண்ட புதுச்சேரி.. சீக்கிரமே வந்து விஜய்.. பேச்சைக் கேட்க திரண்ட தவெக தொண்டர்கள்!
Movie review: வசூலை வாரிக் குவிக்கும் தேரே இஷ்க் மேய்ன்.. எப்படி இருக்கு படம்?
நொறுங்கத் தின்றவனுக்கு நூறு வயசு.. பழமொழியும் உண்மை பொருளும்!
{{comments.comment}}