சென்னை: பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை நாட்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் செப்டம்பர் 12ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக கருதப்படுவது பொங்கல் பண்டிகை. அதிலும் விவசாயிகள் தங்கள் உழவுத் தொழிலுக்கு நன்றி செலுத்தும் வகையில், ஜாதி மதம் பேதம் இன்றி அனைவரும் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். இதற்காக மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணிப்பது வழக்கம். அந்த நேரத்தில் பயணிப்பதற்கு வசதியாகவும் கூட்ட நெரிசலை தவிர்க்கவும் முன்கூட்டியே டிக்கெட் போட்டு விடுவது வழக்கமாகி விட்டது.
அதிலும் பொங்கல் தீபாவளி பண்டிகை வருவதற்கு 120 நாட்களுக்கு முன்னதாகவே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை விடப்பட்டுகிறது. அடுத்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் போகி பண்டிகை ஜனவரி 13-ஆம் தேதியும், பொங்கல் பண்டிகை 14-ம் தேதியும், மாட்டுப் பொங்கல் 15-ம் தேதியும், காணும் பொங்கல் 16-ம்தேதியும் கொண்டாடப்பட உள்ளது.
இதற்காக சொந்த ஊருக்கு செல்பவர்களுக்காக ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் செப்டம்பர் 12ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 15ஆம் தேதி வரை முன்பதிவு மையம் மற்றும் இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
செப்டம்பர் 12ஆம் தேதி முன்பதிவு செய்பவர்கள் ஜனவரி 10-ம் தேதி பயணம் செய்யலாம். செப்டம்பர் 13ஆம் தேதி முன்பதிவு செய்பவர்கள் ஜனவரி 11-ல் பயணம் செய்யலாம். செப்டம்பர் 14ஆம் தேதி முன்பதிவு செய்பவர்கள் ஜனவரி 12-ல் பயணம் செய்யலாம். அதேபோல் செப்டம்பர் 15ஆம் தேதி முன் பதிவு செய்பவர்கள் போகி பண்டிகை அன்று ஜனவரி 13ஆம் தேதி பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாகவே முன்பதிவுகள் தொடங்கிய சில விநாடிகளிலேயே முடிந்து விடுவது வழக்கம். எனவே மக்களே கரெக்டாக டைமுக்குப் பண்ணிடுங்க. டிக்கெட் கிடைக்காதவர்கள் கவலைப்படாதீங்க.. இருக்கவே இருக்கு அரசுப் பேருந்துகளும், ஸ்பெஷல் ரயில்களும். நம்பிக்கையோடு இருப்போம்.. நல்லபடியா பண்டிகையை கொண்டாடுவோம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
ஓடி விளையாடு பெண்ணே
என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?
செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் வைகாசி மாத பௌர்ணமி.. சிறப்பு!
தக்லைஃப் படத்தின் வழக்கு ஜூன் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு
டி20 கிரிக்கெட்டின் சிறந்த வீரர்.. நிக்கோலஸ் பூரன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!
{{comments.comment}}