பொங்கல் பண்டிகைக்கான.. ரயில் டிக்கெட் முன்பதிவு எப்போது..?

Sep 12, 2023,05:09 PM IST
சென்னை: 2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான ரயில் முன்பதிவு நாளை (செப்டம்பர் 13) முதல் தொடங்குகிறது.

2024 ஆம் ஆண்டு பொங்கல் திருநாள், ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஜனவரி 16ஆம் தேதி மாட்டுப் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம். ஜனவரி 17ஆம் தேதி காணும் பொங்கல் என தொடர் அரசு விடுமுறைகள் வர உள்ளது.

ஜனவரி 15ஆம் தேதி திங்கட்கிழமை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் ,பயணிகள் மற்றும் பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல ஆயத்தமாவார்கள். இதற்காக ரயில்களில் டிக்கெட் எடுக்கவும் காத்திருக்கிறார்கள். இந்த ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது.



ஜனவரி 11ஆம் தேதிக்கான பயண முன்பதிவு நாளை தொடங்குகிறது. ஜனவரி 12ம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 14ம் தேதியும், ஜனவரி 13ம் தேதிக்கான ரயில்களுக்கு செப்டம்பர் 15ம் தேதியும் முன்பதிவு தொடங்கும். அதேபோல ஜனவரி 14ம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 16ம் தேதியும், ஜனவரி 15ம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 17ம் தேதியும் தொடங்கும்.

ரயில் டிக்கெட் முன்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கும் என்றும், ஐஆர்சிடிசி  இணையதளம் வழியாகவோ அல்லது டிக்கெட் கவுண்டர் மூலமாக முன்பதிவு  செய்து கொள்ளலாம் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!

news

Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்

news

Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)

news

தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?

news

மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்

news

Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?

news

கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!

news

குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!

news

அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்