பொங்கல் பண்டிகைக்கான.. ரயில் டிக்கெட் முன்பதிவு எப்போது..?

Sep 12, 2023,05:09 PM IST
சென்னை: 2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான ரயில் முன்பதிவு நாளை (செப்டம்பர் 13) முதல் தொடங்குகிறது.

2024 ஆம் ஆண்டு பொங்கல் திருநாள், ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஜனவரி 16ஆம் தேதி மாட்டுப் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம். ஜனவரி 17ஆம் தேதி காணும் பொங்கல் என தொடர் அரசு விடுமுறைகள் வர உள்ளது.

ஜனவரி 15ஆம் தேதி திங்கட்கிழமை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் ,பயணிகள் மற்றும் பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல ஆயத்தமாவார்கள். இதற்காக ரயில்களில் டிக்கெட் எடுக்கவும் காத்திருக்கிறார்கள். இந்த ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது.



ஜனவரி 11ஆம் தேதிக்கான பயண முன்பதிவு நாளை தொடங்குகிறது. ஜனவரி 12ம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 14ம் தேதியும், ஜனவரி 13ம் தேதிக்கான ரயில்களுக்கு செப்டம்பர் 15ம் தேதியும் முன்பதிவு தொடங்கும். அதேபோல ஜனவரி 14ம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 16ம் தேதியும், ஜனவரி 15ம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 17ம் தேதியும் தொடங்கும்.

ரயில் டிக்கெட் முன்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கும் என்றும், ஐஆர்சிடிசி  இணையதளம் வழியாகவோ அல்லது டிக்கெட் கவுண்டர் மூலமாக முன்பதிவு  செய்து கொள்ளலாம் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்