பொங்கல் பண்டிகைக்கான.. ரயில் டிக்கெட் முன்பதிவு எப்போது..?

Sep 12, 2023,05:09 PM IST
சென்னை: 2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான ரயில் முன்பதிவு நாளை (செப்டம்பர் 13) முதல் தொடங்குகிறது.

2024 ஆம் ஆண்டு பொங்கல் திருநாள், ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஜனவரி 16ஆம் தேதி மாட்டுப் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம். ஜனவரி 17ஆம் தேதி காணும் பொங்கல் என தொடர் அரசு விடுமுறைகள் வர உள்ளது.

ஜனவரி 15ஆம் தேதி திங்கட்கிழமை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் ,பயணிகள் மற்றும் பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல ஆயத்தமாவார்கள். இதற்காக ரயில்களில் டிக்கெட் எடுக்கவும் காத்திருக்கிறார்கள். இந்த ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது.



ஜனவரி 11ஆம் தேதிக்கான பயண முன்பதிவு நாளை தொடங்குகிறது. ஜனவரி 12ம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 14ம் தேதியும், ஜனவரி 13ம் தேதிக்கான ரயில்களுக்கு செப்டம்பர் 15ம் தேதியும் முன்பதிவு தொடங்கும். அதேபோல ஜனவரி 14ம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 16ம் தேதியும், ஜனவரி 15ம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 17ம் தேதியும் தொடங்கும்.

ரயில் டிக்கெட் முன்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கும் என்றும், ஐஆர்சிடிசி  இணையதளம் வழியாகவோ அல்லது டிக்கெட் கவுண்டர் மூலமாக முன்பதிவு  செய்து கொள்ளலாம் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்