பொங்கல் பண்டிகைக்கான.. ரயில் டிக்கெட் முன்பதிவு எப்போது..?

Sep 12, 2023,05:09 PM IST
சென்னை: 2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான ரயில் முன்பதிவு நாளை (செப்டம்பர் 13) முதல் தொடங்குகிறது.

2024 ஆம் ஆண்டு பொங்கல் திருநாள், ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஜனவரி 16ஆம் தேதி மாட்டுப் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம். ஜனவரி 17ஆம் தேதி காணும் பொங்கல் என தொடர் அரசு விடுமுறைகள் வர உள்ளது.

ஜனவரி 15ஆம் தேதி திங்கட்கிழமை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் ,பயணிகள் மற்றும் பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல ஆயத்தமாவார்கள். இதற்காக ரயில்களில் டிக்கெட் எடுக்கவும் காத்திருக்கிறார்கள். இந்த ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது.



ஜனவரி 11ஆம் தேதிக்கான பயண முன்பதிவு நாளை தொடங்குகிறது. ஜனவரி 12ம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 14ம் தேதியும், ஜனவரி 13ம் தேதிக்கான ரயில்களுக்கு செப்டம்பர் 15ம் தேதியும் முன்பதிவு தொடங்கும். அதேபோல ஜனவரி 14ம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 16ம் தேதியும், ஜனவரி 15ம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 17ம் தேதியும் தொடங்கும்.

ரயில் டிக்கெட் முன்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கும் என்றும், ஐஆர்சிடிசி  இணையதளம் வழியாகவோ அல்லது டிக்கெட் கவுண்டர் மூலமாக முன்பதிவு  செய்து கொள்ளலாம் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

news

லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!

news

Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி

news

எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!

news

முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!

அதிகம் பார்க்கும் செய்திகள்