டெல்லி: பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் பொன்முடி திருக்கோவிலூர் சட்டசபை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்து வந்தார். இந்த நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கும் அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து பொன்முடியின் அமைச்சர் பதவியும் எம்எல்ஏ பதவியும் தானாகவே பறிபோயின. இந்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொன்முடி அப்பீல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தீர்ப்பை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து பொன்முடிக்கு மீண்டும் எம்எல்ஏ பதவி கிடைத்தது. அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுக்க முடிவு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்குமாறு கூறி ஆளுநர் ஆர் என் ரவிக்கு கடிதம் எழுதினார். இந்த கடிதத்தை பரிசீலித்த ஆளுநர் ஆர்.என். ரவி, தீர்ப்பு தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதே தவிர பொன்முடி நிரபராதி என்று உச்சநீதிமன்றம் கூறவில்லை என்று கூறி பதவி பிரமாணம் செய்து வைக்க மறுத்து விட்டார்.
இதை எதிர்த்து தற்போது உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் ஆளுநர் செயல்பாடுகள் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு புறம்பானது. அரசியல் சாசனத்தை மீறும் செயல். அமைச்சர்கள் சிலரின் இலாகா மாற்றத்துக்கும் ஆளுநர் ஒப்புதல் தராமல் உள்ளார். உச்ச நீதிமன்றம் தீர்ப்பை நிறுத்தி வைத்துள்ளதை தொடர்ந்து அமைச்சர் பதவி வகிக்க பொன்முடி தகுதியானவராக மாறுகிறார்.
அப்படி இருக்கும்போது முதல்வர் முதல்வரின் பரிந்துரை ஏற்க மறுத்து ஆளுநர் செயல்படுவது அரசியல் சாசன சட்டத்திற்கு புறம்பானது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு போட்டியாக அரசு நடத்த ஆளுநர் முயல்கிறார். எனவே அமைச்சராக பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்குமாறு தமிழ்நாடு அரசின் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் ஏற்றுக்கொண்டு நாளையே விசாரிப்பதாக ஒப்புதல் அளித்துள்ளார்.
திமுகவின் சரமாரி தாக்குதலிலிருந்து தப்ப.. அதிமுக, பாஜகவுடன் ஐக்கியமாவாரா தவெக விஜய்?
TVK Vijay: தவெக தலைவர் விஜய்யுடன்.. பவன் கல்யாண் பேசி வருகிறாரா.. உண்மை என்ன?
விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்...நாளை தவெக வேட்பாளர் நேர்காணல் நடப்பதில் சிக்கல்
குந்தவை த்ரிஷா பற்றி சர்ச்சை கருத்து...மன்னிப்பு கேட்டார் நடிகர் பார்த்திபன்
அமெரிக்காவுலதாங்க அதுக்குப் பேரு இறைச்சி பந்து.. நம்ம ஊர்ல என்ன தெரியுமா?
கேஸ் சிலிண்டர் புக் பண்ண போறீங்களா?...இந்த புதிய விதிகளை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க
தமிழக ராஜ்யசபா தேர்தல்... 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு
ஈரான் போர் பதற்றம்..எதிர்க்கட்சிகள் அமளி...வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்
மார்ச் 12ல் தமிழகம் தழுவிய போராட்டம்...தவெக அறிவிப்பு
{{comments.comment}}